Sunday, December 11, 2011

கேரள எல்லையில் கேவல சேட்டைகள்!



முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தின் எதிரொலியாக தமிழகத்தில் சில மலையாளிகளின் கடைகள் தாக்கப்பட்ட செய்திகளைத் தமிழர்களாகிய நாம் சங்கடத்தோடு படித்திருப்போம். ஆனால், கேரள எல்லையில் வசிக்கும் கிராமப்புறத் தமிழர்கள் மீதும் கேரளத்துக்கு கூலி வேலைக்குச் செல்லும் பெண்கள் மீதும் சொல்லில் வடிக்க முடியாத வன்முறைகளை அரங்கேற்றி இருக்கிறார்கள் கேரளத்தைச் சேர்ந்தவர்கள்.
 எல்லையில் இருக்கும் கிராமங்களில் இருந்து கேரளத்துக்கு தினமும் கூலி வேலைக்குச் செல்லும் தமிழர்கள் எண்ணிக்கை இருபதாயிரத்தைத் தாண் டும். குறிப்பாக, கேரளத்தில் இருக்கும் காபி, ஏலக்காய் எஸ்டேட்டுகளில் வேலை செய்யும் பெரும்பாலான தொழிலாளர்கள் தேனி, கம்பம், உத்தமபாளையம் பகுதிகளில் இருந்து சென்று வருபவர்கள்.
அதிகாலையில் எஸ்டேட்காரர்கள் அனுப்பும் வாகனங்களில் புறப்படும் இவர்கள், மாலையில் அதே வாகனங்களில் வீடு திரும்பிவிடுவது வழக்கம். இந்நிலையில், கடந்த டிச. 5-ம் தேதி இப்படிச் சென்ற வர்களை ஆங்காங்கே வழிமறித்த கேரளத்தைச் சேர்ந்த 'போராட்டக்காரர்கள்’ தமிழர்களை மோசமாகத் தாக்கியதுடன், தமிழகப் பெண்கள் மீது பாலியல் வன்முறையையும் அவிழ்த்து விட்டுள்ளனர்.
''அவங்களும் வேன்ல, ஜீப்லதான் வந்தாங்க. அச்சங்கோடு, மந்திப்பாறை, சேத்துக்குழினு அங்கங்க வழிமறிச்சுட்டாங்க. ஏன்டா... உங்க சோத்துக்கு நாங்க தண்ணி விட்டா, எங்க உசுருக்கே நீங்க உலை வைப்பீங்களான்னு கேட்க ஆரம்பிச்சு, தண்ணி வேணுமா... இந்தாங்கடா மூத்திரத்தைக் குடிங்கடான்னு எங்க மேலேயே...'' என்று சொல்ல ஆரம்பித்த அந்தக் கூலித் தொழிலாளியால் அதற்கு மேல் பேச முடிய வில்லை.
''எங்களை வரிசையா நிப்பாட்டி... ஒரு பள்ளிக்கூடத்துல அடைச்சு வெச் சுட்டாய்ங்க. அப்போ 500 பேருக்கு மேல நாங்க இருந்தோம்... பான்பராக், வெத்தலையை எங்க மூஞ்சி மேல துப்புனாங்க. 'இது, உங்க பொம்பள சி.எம். மேல துப்புறதா நினைச்சுத் துப்புறோம்’ன்னான் ஒருத்தன். வயசுப் பொண்ணுங்க சீலையைப் பிடிச்சு இழுத்து, இடுப்புல, மாருல... என்னால சொல்ல முடியலையே சாமீ'' என்று அலறினார் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர்.
தோட்ட வேலைக்குச் செல்வோரில் சிறுமிகளின் எண்ணிக்கை கணிசமானது. அவர்களைத் தனியாக நிறுத்தி, தாவணியை உருவிவிட்டு, மார்பின் மீது முகத்தைத் தேய்த்து செல்போனில் படம் எடுத்து இருக்கிறார்கள்.
''அண்ணா நாங்க அழுதாலும் அடிச்சாங்கண்ணா. அழறதை நிப்பாட்டிட்டு கேவினாலும் அடிச்சாங் கண்னா'' என்றாள் பன்னிரெண்டு வயது சிறுமி ஒருவள்.
''சப்பாத்து, வண்டிப்பெரியார், கட்டப்பனை, நெடுங்கண்டம்னு எல்லாப் பகுதியிலும் பிரச்னை. பெரிய கொடுமை என்னன்னா, கேரள போலீஸ் காரர்கள் பக்கத்துல இருக்கும்போதேதான் இத்தனை கொடுமையும் நடந்துச்சு. அதைவிடப் பெரிய கொடுமை... நூறடித் தூரத்துல நின்னு தமிழ்நாட்டு போலீஸ் இதை எல்லாம் பார்த்துக்கிட்டு இருந்துச்சு. யாராலும் ஒண்ணும் செய்ய முடியலை'' என்றார் கம்பம் எல்லையில் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர்.
ஆயிரக்கணக்கானவர்கள் பாதிக்கப்பட்டு இருக் கிறார்கள். அவர்களின் பெயரையும் நம்மிடம் சொன்னார்கள். அவர்களுடைய உயிர் பாதுகாப்பு கருதி பெயர்களை வெளியிட மாட்டோம் என்ற உறுதியுடன் இந்தச் சந்திப்பு நடந்தது. கம்பத்தைச் சேர்ந்த பேச்சியம்மாள் (37), கொடியம்மாள் (35) இருவரும் ''அய்யா... எங்க உசுரே போனாலும் பரவாயில்லை. இந்தக் கொடுமையை எழுதுங்க'' என்று துணிச்சலாக வாக்குமூலம் அளித்தார்கள். பேச்சியம்மாளை செருப்பால் அடித்திருக் கிறார்கள். கொடியம்மாளின் பின்புறத்தில் அச்சில் ஏற்ற முடியாத அசிங்கத்தை அரங்கேற்றி இருக்கிறார்கள். இந்தக் கொடுமையின்போது பலத்த காயங்களுடன் உயிர் தப்பியவர்களில் ஜீப் ஓட்டுநர் ஜெய சீலனும் ஒருவர். இவர் மீது சிறுநீர் கழித்து இருக்கிறார்கள்.
இந்தக் கொடுமைகளுக்குக் கொஞ்சமும் குறைவில்லாத கொடுமைகள் கேரள எல்லையை ஒட்டி இருக்கும் _ கேரள அரசின் ஆளுகைக்கு கீழ் இருக்கும் _ தமிழர்கள் வசிக்கும் கிராமங்களில் அரங்கேறி இருக்கின்றன (அந்த மக்களின் பாதுகாப்பு கருதி ஊர்ப் பெயர்கள் தவிர்க்கப்படுகின்றன).
அச்சங்கடைப் பகுதியில் கார்கள், ஜீப்புகள் எரிக்கப்பட்டன. வழியில் தென்பட்ட தமிழர்கள் பலர் தாக்கப்பட்டு இருக்கிறார்கள். கேரள செக் போஸ்ட்டில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த கம்பம் அருகே உள்ள என்.டி. பட்டியைச் சேர்ந்த செல்வம் என்பவரின் கார்  தீயிட்டுக் கொளுத்தப்பட்டு இருக்கி றது. தமிழர்களின் டீக்கடைகளும் நாசமாக்கப் பட்டன.
தமிழகத்தில் இருந்து கேரளத்துக்கு ஆட்களை ஏற்றிச் செல்லும் 300-க்கும் மேற்பட்ட ஜீப்புகள் அடித்து நொறுக்கப்பட்டு இருக்கின்றன. வாகனங் கள் தலைகுப்புறக் கவிழ்க்கப்பட்டதாக, வேலைக்கு ஆட்களை ஏற்றிச் செல்லும் கம்பத்தைச் சேர்ந்த ருக்மான் கூறினார். வண்டிப்பெரியாரில் ஐயப்பப் பக்தர்கள் வந்த வண்டியை மறித்து செருப்புமாலை போட்டிருக்கிறார்கள். கடைசி நிலவரப்படி தமிழகத்தில் இருந்து செல்லும் ஐயப்ப பக்தர்கள்  உத்தமபாளையம் அருகில் உள்ள ராயப்பன்பட்டியில் உள்ள ஒரு ஐயப்பன் கோயிலில் வேண்டுதலை நிறைவேற்றி, ஊர் திரும்பிக்கொண்டிருக்கிறார்கள். மத்திய அரசும், தேசியக் கட்சிகளும் எல்லாவற்றையும் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கின்றன வெட்கமே இல்லாமல்!  
சண்.சரவணக்குமார் 
கேரள எல்லையில் அரங்கேறிய அராஜகத்தை நேரில் சென்று விசாரித்துத் திரும்பி இருக்கிறது  'எவிடன்ஸ்’ அமைப்பின் உண்மை அறியும் குழு. 'எவிடன்ஸ்’ அமைப்பின் செயல் இயக்குநர் கதிரிடம் பேசினோம். ''ஆயிரக்கணக்கான தொழி லாளர்கள், குறிப்பாக பெண்கள் மீது ஒரு பெரிய வன்முறை நடத்தப்பட்டு இருக்கிறது. உயிர் பயம், அவமானம் தரும் அச்சுறுத்தல்... எல்லாவற்றையும் தாண்டி எங்களிடம் 37 பேர் வாக்குமூலம் அளித்து இருக்கிறார்கள்.  கொள்கைகள், சித்தாந்தம் என்றெல்லாம் பேசும் கம்யூனிஸ்டுகளும் காந்தியம் பேசும் காங்கிரஸ்காரர்களுமே இவ்வளவு அக்கிரமங்களையும் செய்திருக்கிறார்கள். கேரளக் காவல் துறையும் தமிழகக் காவல் துறையும் எல்லாவற்றையும் வேடிக்கை பார்த்துக் கொண்டு நின்றிருக்கிறார்கள். இந்த விவகாரத்தில் தேசியப் பெண்கள் ஆணையமும் மனித உரிமை ஆணையமும் தானாக முன்வந்து விசாரணை நடத்த வேண்டும். கேரள எல்லையில் நடக்கும் அராஜகங்களைத் தடுக்க முடியாவிட்டால், மன்மோகன் அரசு பதவி விலக வேண்டும்'' என்றார் கதிர்!

தி பியூட்டி பிக்சர்!


ம்புவீர்களா? செம 'நாட்டி’யாக இருக்கும் என்று எதிர்பார்த்த 'தி டர்ட்டி பிக்சர்’ படம் 'பியூட்டி’ பிக்சர் ஆக வெளிவந்திருக்கிறது!
 'சில்க்’கின் வாழ்க்கைக் கதை என்று சொல்லப்பட்டாலும், ஒரு 'நடிகை’யின் கதை’ என்பதுதான் சரி. 'சில்க்’ என்ற கேரக்டரில் ஒரு  நடிகை எதிர்கொள்ளும் அனைத்து ஏற்றத்தாழ்வுகளையும் பொளேரென உணர்த்தி இருக்கிறார்கள்!
'சில்க்’ ஆக வித்யா பாலன். சில்கின் அந்த மயக்கும் விழிகளோ ஈர இதழ் களோ இல்லை. ஆனாலும், ரசிக்க வைக்கிறார் வித்யா. கேரக்டருக்கு நியாயம் செய்ய வேண்டும் என்பதற்காகத் தனது 'ஹோம்லி’ இமேஜை அநியாயத்துக்குக் காலி செய்து நடித்திருக்கிறார். ஆனாலும், எதுவும் தேவை இல்லாத விரசம் கிடையாது.    
எல்லை தாண்டிய கவர்ச்சி மினு மினுப்புகளுக்கு மத்தியில் 'இன்டர் வெல்லுக்குப் பிறகு மாற நான் சினிமா இல்லை... சில்க்!’ என்று அதீதத் தன்னம்பிக்கை திமிர் காட்டும் போதும், இவரைப் பார்க்கப் பிடிக் காமல் முகத்தில் அடித்தாற் போல், அம்மா கதவைச் சாத்தும்போது கலங்கி நிற்கும் இடத்திலும்... வித்யா பாலனின் நடிப்பு பளிச் பளிச்!
  'ஸ்மாஷிங் சூர்யகாந்த்’(!) ஆக, நஸ்ருதீன் ஷா போகிற போக்கில் வித்யாவின் கவர்ச்சியை மீறியும் கவனம் ஈர்க்கிறார்.
'இப்ப நான் நாலு பட்டனைக் கழட்டுனா இங்க இருக்கிறவங்களுக்கு வேர்த்துக் கொட்டும்!’, 'ஃபேமிலியா இருக்கும்போது மூஞ்சைத் திருப்பிக்கிறீங்க. ஆனா, தனியா படத்தைப் பார்த்துட்டு ஃபேமிலியைப் பெருக்கிக்கிறீங்க!’,  'நீங்க கடைசி வரை நாகரிகப் போர்வையிலேயே இருங்க. ஆனா, நான் என் ரசிகர்களுக்குக் காட்டிட்டேதான் இருப்பேன்!’ - படம் முழுக்கத் தெறிக்கின்றன கூர்மையான வசனங்கள்.
''இதில் செக்ஸ் மட்டும் அல்ல... அதைத் தாண்டி 'சில்க்’பற்றி சென்சிபிளான விஷயமும் இருக்கிறது!'' என்று முன்னர் கூறியதற்கு ஏற்ப சென்சிபிள் சினிமாதான் படைத்திருக்கிறார் இயக்குநர் மிலன் லுத்ரியா.  
வித்யா பாலன் என்ன சொல்கிறார்... ''இந்தப் படம் போர்ன் படம் அல்ல... போல்டான படம் என்ற நம்பிக்கை எனக்கு ஷூட்டிங்குக்குப் போவதற்கு முன்னேயே இருந்தது. அது ஜெயித்திருக்கிறது. இந்திய நடிகைகள் அனைவ ருக்கும் இந்தப் படம் சமர்ப்பணம்!''  என்று சிரிக்கிறார்.
நிஜம்தான்!

333 நாட்களுக்குப் பிறகு... வடிவேலு ரீ-என்ட்ரி!


''இப்பதான் சார் பரபரப்பாவும் அதே சமயம் ரிலாக்ஸ்டாவும் இருக்கேன்!'' - உள்ளபடியே குரலில் நிம்மதி தொனிக்கப் பேசுகிறார் பிரசாந்த். 'மம்பட்டியான்’ படத்துக்காகத் தானே வடிவமைத்த இணையதளத்தில் தகவல்களை அப்டேட் செய்தபடியே பேசுகிறார்.
 '' 'மலையூர் மம்பட்டியான்’ படத்தை ரீ-மேக் பண்ண வேண்டிய அவசியம் என்ன?''
'' 'பொன்னர்- சங்கர்’ படம்தான் காரணம்! அந்தப் படத்துக்காக மலை, காடு, கோட்டை, அருவினு கேமராவோ மனுசனோ எட்டிப் பார்க்காத காடுகள், மலைக் கிராமங்கள்னு சுத்தித் திரிஞ்சேன். 'நீ கொடுத்துவெச்ச வன்டா. நான் 'மலையூர் மம்பட்டியான்’ பண்றப்ப மலையூர் மலைக் கிராமத்துக்குக் கூடப் போக முடியலை’னு சொன்னார் அப்பா. அப்போதான், 'பொன்னர் சங்கருக்காக நாலு வருஷம் காடு கரைனு சுத்தின அனுபவம் இருக்கு. நாம ஏன் 'மலையூர் மம்பட்டியானை’த் திரும்ப எடுக்கக் கூடாது?’னு கேட்டேன். 'கரெக்ட்’னு ஒரு வார்த்தை மட்டும் சொன்னவர், அடுத்த வார்த்தையில் இருந்து மம்பட்டியான்பத்தி மட்டுமே பேசிட்டு இருந்தார்!''  
''கிட்டத்தட்ட பதினோரு மாசம் கழிச்சு வடிவேலு நடிச்சு வெளிவரப்போற படம் மம்பட்டியான்... ஸ்பெஷல் சரக்கு எதுவும் வெச்சிருக்கீங்களா?''
''எங்க காம்பினேஷன்ல வந்த 'வின்னர்’தான் இப்பவும் எல்லா சேனல்லயும் ஓடிட்டே இருக்கு. 'மம்பட்டியான்’ல படம் முழுக்க என்னோடு  வடிவேலு வருவார். இத்தனை நாள் இடைவேளைக்கும் சேர்த்து அன்லிமிடெட் ஃபுல் மீல்ஸ் விருந்து வெச்சிருக்கார் மனுஷன். 'சிங்கம்தான்யா’னு வாய்விட்டுப் பாராட்டுற அளவுக்கு ஏகப் பட்ட மாடுலேஷன்ல மிரட்டி எடுத்திருக்கார். அவருடன், பிரகாஷ்ராஜ், மீரா ஜாஸ்மின்னு படம் முழுக்க பவர் பெர்ஃபார் மர்ஸ்தான்!''
''மலையூர் மக்களோட நிலைமை இப்ப முன்னேறி இருக்கா?''
''அப்படியேதான் இருக்கு. அந்த மலைக் காட்டுல ஒவ்வொரு நாளையும் அவ்வளவு சிரமத்தோட கழிக்கிறாங்க. நல்லது கெட்டதுக்கு மலையில இருந்து கீழே மூணு கிலோ மீட்டர் காடு, மலைனு கடந்து நடந்து வரணும். நடந்து நடந்தே உருவான கால்தடம்தான் அவங்களுக்குப் பாதை. லேசா மழை பெய்ஞ்சா... அதுவும் காலி. மம்பட்டியானை இன்னமும் தங்களோட தெய்வமாத்தான் வணங்குறாங்க. பழைய கருங்கல் வீட்லதான் குடியிருக்காங்க. ஆனா, ஒவ்வொரு மனுஷனுக்குள்ளும் அவ்வளவு அன்பு இருக்கு. அந்த மக்களுக்கு அரசாங்கம் ஏதாவது உதவி பண்ணினா... நல்லா இருக்கும்!''  
''ஊருக்கு முன்னாடி ஐஸ்வர்யா ராய்கூட நடிச்சீங்க, கேரியர் ஆரம்பத்துலயே மணிரத்னம், ஷங்கர்னு மாஸ் இயக்குநர்கள் படத்தில் நடிச்சீங்க. ஆனா, இப்ப அப்பா டைரக்ஷன்ல மட்டுமே நடிச்சுட்டு இருக்கீங்க...''
''சினிமாவுக்கு என்னைக் கைப் பிடிச்சு அழைச்சுட்டு வந்தவர் அவர்தானே! 'நீ ஏதாவது ஒரு பொண்ணை லவ் பண்ணிக்கூடத் தொலைச்சிருக்கலாம். உன் பெர்சனல் வாழ்க்கையை நானே சிதைச்சுட்டேன்டா!’னு அப்பா சமயங்களில் கலங்குவார்.  ஒவ்வொருத் தருக்கும் அவங்க அப்பா ஸ்பெஷல்தான். ஆனா, இப்போ வரை எந்த முடிவாக இருந்தாலும், என்னை மனசுல வெச்சே எடுக்கும் என் அப்பா எனக்கு ரொம்பவே ஸ்பெஷல். இவ்வளவு எனர்ஜெட்டிக்கான மனுஷனோட வேலை பார்ப்பதே திருப்தியா இருக்கு!''  
''பெர்சனல் வாழ்க்கை எப்படி இருக்கு? அடுத்த கல்யாணம்பத்தி யோசிச்சீங்களா?''  
''சார், எனக்குக் கல்யாணமே ஆகலை! ஆமாம்...  இப்பவும் நான் பேச்சுலர்தான். சென்னை ஹைகோர்ட் வெப்சைட் போய் என் வழக்கின் தீர்ப்பு நகலைப் படிச்சுப் பாருங்க. ஒரு ஆண் எப்படி அப்பட்டமா ஏமாற்றப்பட்டான்னு அந்தத் தீர்ப்பு சொல்லும். எனக்கு நடந்தது கல்யாணமே கிடையாதுனு தெளிவாச் சொல்லிட்டாங்க. இப்போதைக்கு சினிமாவோட மட்டுமே குடும்பம் நடத்தலாம்னு இருக்கேன். முன்பைவிட இப்பத்தான் பெண்கள் மீது அதிக அன்பும் மரியாதையும் ஏற்பட்டுஇருக்கு. ஏன்னா, அவங்க நினைச்சா ஒருத்தனைத் தலை நிமிர்ந்து வாழவைக்கவும் முடியும்... தலை கீழாப் புரட்டிப் போடவும் முடியும்!'' -கலகலவெனச் சிரிக்கிறார் பிரசாந்த்.  

அப்பா மாதிரியே காதலிப்பேன் - அதர்வா !


லையை மறைத்துத் தொப்பி அணிந்திருக்கிறார் அதர்வா. 'யாருக்கும் தெரியக் கூடாது அதர்வா!’ என்று இயக்குநர் பாலாவின் டோனிலேயே சொல்கிறார்.
 ''பாலா சார்கிட்ட கிட்டத்தட்ட தினமும் டியூஷன் படிக்கிறேன். சினிமாவில் ரொம்ப சீக்கிரமே எனக்கு நல்லது நடக்க ஆரம்பிச்சிருக்கு. அப்பா இப்ப இருந்தா ரொம்ப சந்தோஷப்படுவார்!'' - குரல் கனிந்து இளகு கிறது அதர்வாவுக்கு.
'' 'பாலா படம்னா நிறைய கஷ்டப்படணும். உண்டு இல்லைனு ஆக்கிடுவார்’னு சொல்வாங்களே?''
''அதுதானே அழகு! செம சீனியர் ஸ்டார்களில் இருந்து நடிக்கிற ஆசையோட நேத்து சென்னைக்கு வந்த ஆள் வரைக்கும் பாலா படத்தில் நடிக்க ஆசைப்படுவாங்க. எவ்வளவு கஷ்டப்பட்டாலும் கிடைக்காத வாய்ப்பு கிடைச்சதுக்காக, எவ்வளவும் கஷ்டப்படலாம். இன்னொரு விஷயம், இனிமே யாரும் தமிழ் சினிமாவில் கஷ்டப் படாமல் சும்மா நடிச்சிட்டுப் போக முடியாது. வழக்கமான ஃபார்முலா படங்களுக்கு ரசிகர்கள்கிட்ட மினிமம் வரவேற்புகூட இனிமே இருக்காதுனுதான் நினைக்கிறேன். உழைப்பைக் கொட்டாம இனிமே ஜெயிக்க முடியாது. இது எல்லோருக்கும் பொருந்தும்!''
''நீங்க நடிச்சு ஒரு படம்தான் வந்திருக்கு. அதுக்குள்ள எப்படி பாலா பட வாய்ப்பு வந்தது?''
''அப்பாவுக்கும் அவருக்கும் நல்ல ஃப்ரெண்ட்ஷிப் இருந்தது. அடிக்கடி சந்திப்பாங்க. அப்பா இல்லாதப்போ எனக்கு ஒரு லைஃப் கொடுக்கலாம்னு பாலா சார் நினைச்சிருக்கலாம். 'ஆபீஸுக்கு வா’னு ஒரு நாள் அழைப்பு. பறந்து போய் நின்னேன். 'என் அடுத்த படத்தில் நீதான் ஹீரோ’னு சொன்னார். அந்த சந்தோஷத்தைக்கூட உணரத் தோணலை. 'சரி சார்’னு சொல்லிட்டு வெளியே வந்துட்டேன். அப்புறம்தான் எனக்கு என்ன நடந்திருக்குனு புரிஞ்சது. அம்மாகிட்டதான் முதல்ல விஷயத்தைச் சொன்னேன். 'நல்ல விஷயம்டா... அப்பா இருந்தா ரொம்ப சந்தோஷப்பட்டிருப் பார்’னு சொன்னாங்க. ரொம்ப சந்தோஷமா இருக்கு!''  
''கங்கிராட்ஸ் அதர்வா... ஆங்... படத்தோட கதை என்ன?''
''பார்த்தீங்களா... சின்னப் பையன்தானே... ஒரு கங்கிராட்ஸ் சொல்லிட்டு கதையைக் கறந்துரலாம்னு நினைச்சீங்களா? பாலா சாருக்கு இதெல்லாம் தெரியாமலா இருக்கும். 'யார் கேட்டாலும் கதை லைனைக்கூடச் சொல்லாத. அடிச்சுக் கேட்டாலும் சொல்லாத. முடிஞ்ச வரை வெளியேகூடப் போகாத’னு சொல்லி இருக்கார். இப்போதைக்கு கதை அவருக்கு மட்டும்தான் தெரியும். அவர் ஸ்டார் மேக்கர். அதைத் தவிர எனக்கு வேற எதுவும் தெரியாது!''
'' 'முப்பொழுதும் உன் கற்பனைகள்’ படத்துல அமலாகூட கெமிஸ்டரி அள்ளுதே...''
''ரொம்ப வெட்கப்பட்டுக்கிட்டே நடிச் சேங்க. 'இது பத்தாது... இது பத்தாது’னு சொல்லிச் சொல்லி எக்கச்சக்கமா நடிச் சிட்டோம். அந்தக் காதல் கதைக்கு அதெல்லாம் தேவைப்பட்டது. அமலா  ரொம்ப சின்சியர் கேர்ள்!''
''உங்க சீனியர்களில் யார் உங்களுக்கு ரோல் மாடல்?''
''எனக்கு ரொம்பப் பிடிச்சவங்க சூர்யா வும் தனுஷ§ம். பெரிய இடத்துக்கு வந்துட் டோமேனு சூர்யா சார் ஈஸியா இருக்க மாட்டார். ஒவ்வொரு படமும் மாஸ்தான் அவருக்கு. தனுஷ் சார் இமேஜ் அது இதுனு எதையும் பார்க்க மாட்டார். பின்னி எடுத் துடுவார். நடிகன்னா அப்படி இருக்கணும். எல்லார்கிட்டயும் கத்துக்க எனக்குப் பாடம் இருந்தாலும், இவங்க ரெண்டு பேரும் எனக்கு ஃபேவரைட்ஸ்!''
''ரியல் லைஃப்ல இனிமேதான் காதலிக்கணும்னு சொல்லாதீங்க. 'காதல்’ புகழ் முரளி பேரைக் காப்பாத்தணும் இல்லையா?''
''அப்பாவும் அம்மாவும் 14 வயசுல இருந்து காதலிச்சு வளர்ந்தவங்க. எனக்கு விவரம் தெரிஞ்ச வயசுல இருந்தே அவங் களுக்கு இடையிலான காதலை உணர்ந்தே வளர்ந்தேன். அவ்வளவு ஈர்ப்போடு இருப்பாங்க. அப்பா மாதிரியே எனக்கும் காதல் திருமணம்தான். ஆனா, அதுக்கு இப்ப என்ன அவசரம் சார்?''

இனிமேல் பாருங்கள் எனது அரசியலை! கனிமொழி வைராக்கிய பேட்டி


டிசம்பர் மூன்றாம் தேதி சென்னை விமான நிலையத்துக்குள் நுழைந்தவர்கள், 'வழி தவறி அண்ணா அறிவாலயத்துக்குள் நுழைந்துவிட்டோமோ...’ என்று ஒரு கணம் குழம்பியிருப்பார்கள். 193 நாட்கள் திகார் சிறைவாசத்துக்குப் பிறகு, கனிமொழி சென்னை திரும்பிய தினம் அது!
 'கனியக்கா எத்தனை மணிக்கு வர்றாங்க? ஃப்ளைட் வந்துடுச்சா?’ என்று எதிர்ப்பட்டோரிடம் எல்லாம் விசாரித்தபடி அலைந்துகொண்டு இருந்தார்கள் பாசக்கார உடன்பிறப்புக்கள். சென்னை சங்கமம் புகழ் இசைக் கலைஞர்களின் 'டங்குணக்க டங்குணக்க’ மேள தாளங்கள் அதிரத் துவங்க, தொண்டர் களோடு மகளிர் அணியினரும் சேர்ந்து ஆடியது அக்மார்க் குத்தாட்டம்!
சரியாக மதியம் 12.20-க்கு தயாளு அம்மாளுடன் மு.க.ஸ்டாலின் விமான நிலையம் வந்தார். பெங்களூரில் இருந்து வந்திருந்த செல்வி தனது கணவர் செல்வத்துடன் வர, மு.க.தமிழரசு தன் மனைவி மோகனாவுடன் நுழைந்தார். சற்று நேரத்தில் கருணாநிதியுடன் ராஜாத்தி அம்மாள் வந்தார். அவர்களை ஜே.கே.ரித்தீஷ் கும்பிடு போட்டு வரவேற்றார். இதற்குள் தொண்டர் களின் கட்டுக்கடங்காத கூட்டத்தால் திமிற ஆரம்பித்தது விமான நிலைய வளாகம்!
குடும்ப உறுப்பினர்கள் மட்டும் விமான நிலைய வரவேற்பறையில் காத்திருந்தார்கள். ''கனி வர இன்னும் எவ்வளவு நேரம் ஆகும்?'' என்று கருணாநிதி கேட்க... ''ஒன்றரை மணிக்கு வரும் ஃப்ளைட்'' என்று சொல்லி இருக்கிறார்கள். அப்போது குடும்ப உறுப்பினர்களைப் பார்த்து கருணாநிதி, ''கனி ஜெயில்ல ரொம்பவே கஷ்டப்பட்ருச்சு. தொண்டர்களும் ரொம்ப எதிர்பார்ப்பு வெச்சிருக்காங்க. கனிக்கு முக்கியப் பொறுப்பு கொடுக்கணும்'' என்று ஆரம்பிக்க... ''அதைப்பத்தி உடனே ஏன் பேசணும்?'' என்று விவகாரத்தைச் சற்றுத் தள்ளிவைத்தாராம் ஸ்டாலின்.
ஜெட் ஏர்வேஸ் விமானம் தரை இறங்கியதும் வரவேற்பு அறையில் இருந்து வெளியே வந்தார் கருணாநிதி. மகன் ஆதித்யா, கணவர் அரவிந்தன் சகிதம் சிரித்த முகத்தோடு வந்த கனியைப் பார்த்ததும், கருணாநிதியின் கண்களில் இருந்து கரகரவென வழிந்தது நீர். கனிமொழியை அருகில் வரச் சொல்லி அணைத்து, நெற்றியில் முத்தம் கொடுக்க... தயாளு அம்மாளும் கனியைக் கட்டி அணைத்துக்கொண்டார். ஓரிரு நிமிடங் கள் அங்கு நிலவியது கனத்த அமைதி. அதைக் கலைத்தது ஆதித்யாதான். ''அதான்... அம்மா வந்துட்டாங்கள்ல... அப்புறம் ஏன் அழறீங்க தாத்தா?'' என்றபடி கன்னத்தில் வழிந்த கண்ணீரைத் துடைக்க... நெகிழ்ந்துவிட்டார் கருணாநிதி. கட்சியினர் அளித்த பூங்கொத்துக்களையும் வாழ்த்துக்களையும் பெற்றுக்கொண்டு கருணாநிதியுடன் வெளியே வந்தார் கனிமொழி.
''கனியக்கா... கனியக்கா...'' என்று உணர்ச்சி மிகுதியில் முண்டியடித்து முன்னேறிய கூட்டத்தைப் பார்த்ததும் கனிமொழி முகத்தில் உற்சாக சந்தோஷம். விமான நிலையத்தில் இருந்து சி.ஐ.டி. காலனி செல்லும் வழியெங்கும் கனிமொழியை வாழ்த்தி ஏகப்பட்ட விளம்பரத் தட்டிகள். 'இனி நீ பூங்கொடி அல்ல; போர்க் கொடி’, 'ஏழைகளின் தோழி நீ... எழுச்சி சூரியனாய் வாழி நீ’, 'பூட்டிய இரும்புக் கூண்டின் கதவு திறந்தது... அதிகாரக் கூட்டத்தின் கனவு கலைந்தது’ என்றெல்லாம் ஏகத்துக் கும் வாழ்த்து மழை!  
கூண்டுக்குள் இருந்து கிளி வெளியே வருவதுபோல வரையப்பட்ட படத்துடன் 'சிறைபட்டது நீ... வதைபட்டது நாங்கள்!’ என்று எழுதப்பட்ட பேனர், கனிமொழியின் வீட்டுக்கு எதிரே பிரமாண்டமாகப் படபடத்தது. வீட்டு வாசலின் முன் போடப்பட்டு இருந்த பிரமாண்ட கோலத்தின் நடுவே 'வெல்கம்’ என்ற வரவேற்பு வாசகம்!
ஆரத்திகள், கற்பூர தீபம், திருஷ்டிப் பூசணிக்காய் சுற்றல் வைபவங்கள் முடிந்து, கார் வீட்டுக்குள் நுழைந்து நின்றபோது, கார் கதவைத் திறக்க முடியாத அளவுக்குக் கூட்டம். பேராசிரியர் அன்பழகன், ஆற்காட்டார், கோ.சி.மணி போன்றவர்கள் கனிமொழிக்கு சால்வை போர்த்த, வீட்டில் இருந்த உறவுகள் ஆரத்தி எடுத்து, கனி மொழியின் நெற்றியில் பொட்டுவைத்தனர். மற்றவர்கள் தன்னை 'எப்படி இருக்கீங்க?’ என்று கேட்பதற்கு முன்னரே, ''எப்படி  இருக்கீங்க?'' என்று முந்திக்கொண்டு அவர் களை விசாரித்தார் கனிமொழி. வீட்டு வளாகத்துக்குள் கூடியிருந்த தொண்டர் களுக்கு சரவண பவன் விருந்து. வீட்டுக் குள் மீன் குழம்பு மணம் கமகமத்தது. சமையல் தயாராகி கனியைச் சாப்பிட வருமாறு ராஜாத்தி அம்மாள் அழைக்க...
''வாய்க்கு ருசியா சாப்பிட்டு ரொம்ப நாள் ஆகி இருக்கும். என் கையால சாப்பிடும்மா!'' என்று கருணாநிதி சோறு எடுத்து கனிமொழிக்கு ஊட்ட... ''நீங்களும் என் கையால சாப்பிட்டு எத்தனை நாளாச்சு!'' என்று கனியும் அப்பாவுக்குச் சோறு ஊட்டினார்.
சி.ஐ.டி. காலனி இல்லம் இதற்கு முன் இப்படி ஒரு கொண்டாட்டத்தை எதிர்கொண்டது இல்லை. சிறைபட்ட நாட்களின் வருத்தங்களை அந்த ஒரே நாளிலேயே மறக்கும் அளவுக்கு இருந்தது சந்தோஷப் பரவசம். ஆனாலும், கனிமொழி முகத்தில் எந்தச் சலனமும் இல்லை. கிடைத்த சிறு சிறு இடைவேளைகளில் அவரிடம் பேசியதில் இருந்து...
''எப்படி இருக்கீங்க?''
''பழைய பலம் திரும்பிய மாதிரி இருக்கு. எப்பவும் உணராத உற்சாகமும் புத்து ணர்ச்சியும் என்னைத் திக்குமுக்காடவைக்குது. விமான நிலையத்துக்கே தொண்டர்கள் திரண்டு வந்து வரவேற்று மகிழ்ந்ததைப் பார்த்தபோது நெகிழ்ந்து விட்டேன். பேராசிரியரும் ஆற்காட்டாரும் வீட்டுக்கே வந்து என்னை வாழ்த்தியது... நானே எதிர்பார்க்காத இன்ப அதிர்ச்சி. என் வலியைவிடப்பெரிய ஆறுதல் இதெல்லாம்!''
'' 'சிறைக்குச் செல்லும் நிலைக்குக் கொண்டுவந்துவிட்டதே...’ என்று அரசியல் மீது வெறுப்பு வரவில்லையா?''
''என்னை அரசியலுக்குக் கைப்பிடித்து அழைத்து வந்தவர் தலைவர்தான். அரசியலில் தலைவர் சந்திக்காத சோதனைகளே இல்லை. அந்தச் சோதனைகளை எல்லாம் போர்க் குணத்தோடு எதிர்த்துப் போராடி வெற்றிபெற்றார். தலைவரிடம் இருக்கும் தைரியம், போர்க் குணம் எனக்கும் உண்டு. நான் எந்தத் தப்பும் செய்யவில்லை. தவறான பழி என் மீது விழுந்துவிட்டது. அதில் இருந்து மீண்டு நான் நிரபராதி என்பதை நீதிமன்றத்தில் நிரூபிப்பேன். அரசியல் மீது எனக்கு வெறுப்பு கிடையாது. இனிமேல் பாருங்கள் எனது அரசியலை. தலைவர் எதிர்பார்ப்புக்கு ஏற்ப நான் தொடர்ந்து தீவிர அரசியலில்தான் இருப்பேன். என் மீது நம்பிக்கை வைத்திருக்கும் தொண்டர்களின் நம்பிக்கைக்கு ஏற்பச் செயல்படுவேன்!'' என்று உறுதிமிக்க குரலில் பேசி முடித்துக் கைகளைக் கூப்புகிறார்!

Sunday, December 4, 2011

நிலம் வாங்க ரூ.6.23 லட்சம் வைத்திருந்த பிச்சைக்காரர்


தஞ்சாவூர்: தஞ்சையில் திருட்டு தொடர்பாக பிச்சைக்காரரிடம் சோதனையிட்டதில் சிக்கிய, 6.23 லட்சம் ரூபாய்க்கு, அவர் வங்கி ரசீதுகளை காட்டி பணத்தை மீட்டுச் சென்றார். இது, போலீசாரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி தாலுகா அலுவலக சாலை இரண்டாம் தெருவைச் சேர்ந்தவர் அப்துல் சமது, 55. இவரது மனைவி நூர்ஜகான், 45. இந்த தம்பதிகள் பிச்சை எடுப்பதை தொழிலாகக் கொண்டவர்கள். இருவரும் சேர்ந்து ஒரே இடத்தில் பிச்சை எடுப்பதில்லை. சீசனுக்கு தகுந்தாற்போல் திருச்சி, சென்னை, ஏர்வாடி, நாகூர் போன்ற ஊர்களில் உள்ள பள்ளிவாசல்களில், விழாக்கள் நடக்கும் போது பிச்சை எடுக்கச் சென்று வருவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.
தற்போது இவர்கள் தஞ்சை ஆற்றுப்பாலம் ஜூம்மா மசூதியில், சில வாரங்களாக தங்கி பிச்சை எடுத்து வருகின்றனர். காந்திஜி சாலையில் உள்ள இரட்டை மஸ்தான் தர்கா அருகில் இரவு நேரங்களில் தங்கி வந்துள்ளனர். கடந்த 2ம் தேதி, கீழவாசலைச் சேர்ந்த மன்சூர் என்பவர், தொழுகைக்கு வந்துள்ளார். அவர் மொபைல் போன் தொலைந்ததும் போலீசில் புகார் செய்தார். உடனே, பள்ளி வாசல் நிர்வாகிகள் மற்றும் மன்சூர் சேர்ந்து, சந்தேகத்தின் பேரில் மசூதி வாசலில் இருந்த பிச்சைக்காரர்களை சோதனையிட்டனர். அங்கே பிச்சை எடுத்துக் கொண்டிருந்த அப்துல் சமது பையை எடுத்து சோதனையிட்ட போது, அவரது பையிலிருந்து கத்தை, கத்தையாக லட்சக்கணக்கில் பணம் இருந்துள்ளது. இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த பள்ளிவாசல் நிர்வாகிகள், சமதையும், அவரது பணத்தையும் தஞ்சை மேற்கு போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைத்துள்ளனர். எஸ்.ஐ., சுதா மற்றும் போலீசார், அப்துல் சமதுவிடம் விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் அப்துல் சமது கூறியதாவது: கடந்த 2003ல், சென்னை தாம்பரம் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வங்கியில் ஒரு தொகையை டெபாசிட் செய்திருந்தேன். அதேபோல், சென்னை, திருச்சி ஆகிய இடங்களில் சில வங்கிகளில் பணத்தை பிரித்து டெபாசிட் செய்து வைத்திருந்தேன். பிச்சை எடுப்பது எளிதாக இருந்தாலும், இரவில் தங்குவது மிகவும் சிரமமாக இருந்தது. ஆகையால், வங்கிகளில் டெபாசிட் செய்திருந்த பணத்தை எடுத்து, தஞ்சையில் இடம் வாங்கி செட்டில் ஆகிவிட வேண்டும் என்ற ஆசையில் வந்தேன். ஒரு மாதமாக இடம் தேடியும், சரியான இடம் அமையவில்லை என்பதால், கையிலேயே பணத்தை வைத்து அலைந்து வருகிறேன். இவ்வாறு அப்துல் சமது கூறினார். மேலும், அவர் வைத்திருந்த, 6 லட்சத்து, 23 ஆயிரத்து, 930 ரூபாய்க்கு உரிய வங்கி ரசீதுகளை போலீசாரிடம் காட்டியதும், அவரை, "பணத்தை பத்திரமாக வைத்துக் கொள்ளுங்கள்' என்று கூறி வியப்புடன் அனுப்பி வைத்தனர்.

Friday, December 2, 2011

பிரபாகரனுக்கு திருத்தம் சொன்ன மதன்...



நன்றி - விகடன் 


 இப்படி சயனைடை விழுங்கி இறந்தவர்கள் மட்டுமே இதுவரை 30 பேர் இருக்கும். ராணுவ மோதல்களில் உயிர்விட்டவர்கள் கணக்கு மிக மிக அதிகம். அவர்களுடைய இயக்கப் புத்தகத்தில் இந்த இளம் கொழுந்துகளின் புகைப்படங்களைப் பார்த்தபோது, நம் கைகள் நடுங்கின... உள்ளம் அழுதது. இந்த இழப்புகளை எல்லாம் தாங்கிக்கொண்டு தொடர்ந்து கடமையாற்றும் அந்த லட்சியவாதிகளை வர்ணிக்க வார்த்தைகளைத் தேட வேண்டும்.விடுதலைப் புலி இயக்கத்தைச் சேர்ந்த இளைஞர்கள் கொரில்லா யுத்தத்தில் ஈடுபடும்போது சிங்கள ராணு​வத்​​​தினரிடம் சிக்கிக்கொண்டால், ஒரு சிறு தகவலைக்கூட அவர்களிடம் இருந்து கறந்துவிட முடியாது. காரணம், ஒவ்வொரு வீரரும் தன்கூடவே கொடிய விஷமான சயனைட் நிரப்பப்பட்ட சிறு குப்பி ஒன்றை வைத்திருக்கிறார். தப்ப முடியாத, நெருக்கடியான சூழ்நிலை ஏற்பட்டால், உடனே அந்தக் குப்பியைக் கடித்து விஷத்தை விழுங்கி உயிர்த் தியாகம் செய்துவிடுவார்கள்!
விடுதலை இயக்கத்தில் பிரபாகரன் சேர்ந்தது ஏன்? அதற்கு என்ன பின்னணி?
பிரபாகரனே சொன்னார்...
''ஒரு நாள் என் அம்மாவிடம் ஒரு பெண்மணி பேசிக்கொண்டு இருந்தார். தனது மகள் திருமணத்துக்குப் பணம் திரட்டிக்கொண்டு இருந்தார் அந்தப் பெண்மணி என்பது புரிந்தது. அந்தப் பெண்மணியை உற்றுப் பார்த்தேன். அவரது கால்கள் முழுவதும் நெருப்பில் எரிந்து கருகிக்கிடந்தது. 1958-ல் நடந்த இனக் கலவரத்தில் அவர்களது குடும்பம் நாசமாக்கப்பட்ட கதையை அவர்கள் பேச்சில் இருந்து அறிந்தேன். என் இதயத்தில் அழுத்தமாகப் பதிந்துவிட்டது அந்த நெருப்பில் கருகிய கால்கள். அப்பொதெல்லாம் தமிழர்கள் படுகொலை செய்யப்படும் செய்திகள் வரும்... கூடிக் கூடிப் பேசுவோம். பாணந்துறையில் குருக்களைக் கொலை செய்ததைப்பற்றி ஊர் பீதியுடன் பேசியது... என் இதயத்தை இச்செய்திகள் தாக்கிச் சின்னாபின்னமாக்கும்.
நான் கடைக்குட்டி. வீட்டில் எல்லோருக்கும் செல்லப் பிள்ளை. வெளியே நடமாட விட மாட்டார்கள். புத்தகம்தான் துணை. நெப்போலியன், அலெக்ஸாந்தர். வீரசிவாஜி. நேதாஜி போன்றவர்களின் வரலாறுகளைப் படித்தவாறு இருப்பேன். வெளியே இருந்து என்னைத் தாக்கிய துயரச் செய்திகளும், இந்த வரலாறுகளைப் படிப்பதும் எனக்குள் மாற்றங்களைச் செய்தன.
வல்வெட்டித் துறையில் நிரந்தர ராணுவ முகாம் உண்டு. கள்ளக் குடியேற்றம், கள்ளக் கடத்தல் ஆகியவற்றைத் தடுப்பது இந்த ராணுவ முகாமின் நோக்கம் ஆனால். ராணுவத்தினர் அப்பாவிப் பொதுமக்களை அநாவசியமாகத் திடீரென்று தாக்குவார்கள். பொதுமக்கள் பாதிக்கப்பட்ட சம்பவங்களும் என் உள்ளத்தில் கொதிப்பை ஏற்படுத்தியது.
எனது இளமைப் பருவத்தில் சத்தியசீலன் போன்றோர், ஈழத் தமிழர் நிலை பற்றி எடுத்துரைக்க ஆரம்பித்து இருந்தனர். இன்று மேற்கு ஜெர்மனியில் அகதியாக இருக்கும் அவரைப் போன்றோர்தான் இம்மாதிரி இயக்கங்களின் முன்னோடி. தமிழ் ஈழம்தான் தமிழர் துயர் தீர ஒரே வழி என்ற கருத்துக்களைப் பள்ளிகளில் சில ஆசிரியர்கள் மெதுவாக எடுத்துச் சொல்வது உண்டு.''
பிரபாகரனின் குடும்பத்தை இலங்கை அரசு 'ஒரு கை’ பார்க்காமலா இருக்கும்? அவரது வீடு இடிக்கப்பட்டது. அப்பாவுக்கு பென்ஷன் மறுக்கப்பட்டது. நாடோடியாகத் திரிய வேண்டிய கதி ஏற்பட்டது.
போராட்ட வாழ்வின் நடுவே பிரபாகரன் திருமணம் புரிந்தார். மனைவி பெயர் மதிவதனி. தன் ஒரே குழந்தைக்கு 'சார்லஸ் ஆண்டனி’ என்று பெயர் சூட்டியிருக்கிறார் இதற்கு ஒரு காரணம் உண்டு. பிரபாகரனின் உயிர்த் தோழராக சார்லஸ் ஆண்டனி என்பவர் இருந்தார். தமிழர்களுக்காகப் போராடிய அந்த வீரரை இலங்கை ராணுவம் சூழ்ந்து நின்று சுட்டு வீழ்த்தியது. பிரபாகரன் கோபம்கொண்டார். ஆண்டனியின் உடையை அணிந்து, கையில் துப்பாக்கியோடும், கண்களில் தீப்பொறியோடும் பாய்ந்து வெளியே சென்று இலங்கை ராணுவத்தைச் சேர்ந்த 13 பேரை அழித்துப் பழிவாங்கினார். அவர் நினைவாகத்தான் குழந்தைக்குப் பெயர்.
பிரபாகரன் 'கொரில்லா’ பயிற்சியை க்யூபாவில் பெற்றதாகச் சொல்வார்கள். அதைப் பற்றிக் கேட்டபோது. ''அப்படிப்  பேசப்படுவது உண்மை அல்ல. புத்தகங்களைப் படித்து நானாகவே பயின்றேன். கற்பதன் மூலம் தெரிந்துகொள்வதைவிட சுற்றியிருக்கும் 'ஆபத்து’ நமக்கு அதிகப் பயிற்சியைக் கொடுக்கும். எனக்கு 'ஆபத்து’தான் குரு...'' என்று சொல்லி சிரித்தார். சாதாரண துப்பாக்கியில் இருந்து நவீன ஆயுதங்களை இயக்குவது வரை கை தேர்ந்தவர்.
பிரபாகரனுக்கு ஓவியம், கார்ட்டூன் வரை​வதில் ஆசை உண்டு. இயற்கைக் காட்சிகளும் வரைவாராம்.
''எங்கே, ஏதாவது படம் போடுங்களேன்...'' என்று கேட்டோம்.
ஸ்ரீலங்கா ராணுவத்தையே எதிர்த்துத் திணற​வைக்கும் பிரபாகரன் சற்றுத் தயக்கத்துடன். ''நீங்கள் எதிரே இருப்பதால், பயமாக இருக்கிறது'' என்றார் மதனைப் பார்த்து!
பிறகு சில படங்களைக் குட்டியாகப் போட்டுக் காண்பித்தார். எந்தப் படத்தையும் 'நீட்டாக’ முடித்துவிட்டுத்தான் தலையை நிமிர்த்தினார்.
ஒரு காலில் நிற்கும் கொக்கும் படத்தை ஒரு நிமிடம் எடுத்துக்கொண்டு போட்டார்.
''இந்தப் படத்தில் ஒரு தவறு இருக்கிறது'' என்றார் மதன்.
''என்ன?'' என்று ஆவலுடன் கேட்டார் பிரபாகரன்.
''கொக்கின் கால் இப்படி உட்பக்கமாக மடங்காது'' என்றார் மதன்.
''அப்படியா..?'' என்று சிரித்த பிரபாகரன், ''எத்தனையோ பிரச்னைகள்... இனிமேல் கரெக்டாகப் போடுவேன்...'' என்றார் மதன் போட்ட திருத்தப் படத்தைப் பார்த்தவாறு.
விடைபெற வேண்டிய நேரம் வந்தபோது, தமிழ் ஈழம் பற்றி மீண்டும் பேச்சு திரும்பியது. ''தமிழ் ஈழம் பெறும் நாளை நெருங்கிக்கொண்டு இருக்கிறோம். எங்களுக்குத் தேவையான உதவிகள் கிடைக்கும் என்றால், ஈழத்தை அடைவது பெரிய விஷயம் அல்ல'' என்றார்.
தன்னைச் சிலர், 'இந்திய எதிரி’ என்று வர்ணிப்​பதைப்பற்றி குறிப்பிட்டு, அந்தக் குற்றச்சாட்டைத் திட்டவட்டமாக மறுத்தார் பிரபாகரன்.
''இந்திய ராணுவம் நடவடிக்கையில் இறங்குவதில் உள்ள சிரமம் எங்களுக்குப் புரிகிறது. அதனால், இந்தியாவை சர்வதேச நாடுகள் தவறாகப் புரிந்துகொள்ளக்கூடிய நிலைமை ஏற்படலாம். தனி ஈழம் அமைக்க சம்மதித்தால் அது தமிழ் இன நாடாக அமைந்து, இந்தியாவில் உள்ள தமிழ்நாடு பிரிவினை கோரும் கட்டம் வரலாம் என்று சில இந்தியத் தலைவர்கள் முன்பு கருதினார்கள். தனி ஈழம், தமிழ்நாட்டுப் பிரிவினையைத் தூண்டிவிடும் என்பது அபத்தம். இந்தியா என்ற மாபெரும் நாடு உலகத்துக்கே வழிகாட்டும் அற்புதமான நாடு. உலகமே வியக்கும் விதத்தில் இந்தியாவில் ஜனநாயக ஆட்சி நடக்கிறது. மக்கள் குரலுக்குத் தலை வணங்கும் ஆட்சி நடக்கிறது. சம உரிமைகள் வழங்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் பிரிவினை கோஷம் இனி இந்தியாவில் எழுவதற்கே வாய்ப்பு இல்லை...''

சட்டசபைக்குள் பிரபாகரன் படம் போட்ட சட்டையுடன் நுழைவேன்!


மாவீரர் நாள் கொண்டாட்டங்கள்

முள்ளிவாய்க்கால் படுகொலைகளுக்குப் பிறகும், உலகத் தமிழினமே மாவீரர் தினத்தை எழுச்சியோடு கொண்டாடி வருகிறது. இந்த ஆண்டு கனடா, லண்டன், அமெரிக்கா, ஆஸ்திரேலியா போன்ற அன்னிய தேசங்களில்கூட மாவீரர் தினத்தைக் கொண்டாட அனுமதித்தனர். ஆனால், தமிழகத்தில் அதற்குத் தடை விதித்து, தமிழ் உணர்வாளர்களின் நெஞ்சில் நெருப்பை அள்ளிக் கொட்டி இருக்கிறது அ.தி.மு.க. அரசு! 
கடலூர் மஞ்சக்குப்பம் மைதானத்தில் 'நாம் தமிழர்’ கட்சியின் தலைவர் சீமான் தலைமையில் பிரமாண்ட பொதுக் கூட்டம் நடத்தத் திட்டமிடப் பட்டு இருந்தது. தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்ததும், 'தடையை மீறி கூட்டத்தை நடத்திக் காட்டுவோம்’ என்று கட்சியினர் ஆவேசமாகவே, கடலூர் சூடானது.
ஆனால் சிக்கல் வரக் கூடாது என்று நினைத்தோ என்னவோ, கடலூர் சுப்புராயலு திருமண மண்ட பத்தில் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. தமிழ் ஈழப் போரில் உயிர் நீத்தவர்களுக்கு மெழுகுவத்தி ஏற்றி வீரவணக்கம் செலுத்திவிட்டுப் பேச ஆரம்பித் தார் சீமான். ''தமிழக அரசு எங்களை அடக்கி முடக்கிவிடலாம் என்று நினைக்கிறது. அது ஒருபோதும் நடக்காது. சர்வதேசத் தடைகளையே பார்த்தவன் நான். இந்தத் தடைகள் எல்லாம் நம்மை என்ன செய்யும்? நாங்கள் வீட்டைவிட்டு வெளியில் கிளம்பும்போது, வாய்க்கரிசியை வாயில் போட்டுக்கொண்டுதான் கிளம்புவோம். இந்தப் பூச்சாண்டிகளுக்கு எல்லாம் பயப்பட மாட்டோம்'' என்றதும் தொண்டர்கள் ஆர்ப்பரித்தனர். ''கண்டிப் பாக ஒரு நாள் நான் எம்.எல்.ஏ. ஆவேன். அப்போது சட்டசபைக்கு தலைவர் பிரபாகரன் படம் போட்ட சட்டையோடுதான் போவேன். அப்போது முடிந்தால், 'சட்டசபைக்கு சீமான் வரக் கூடாது’ என தமிழக அரசு தடை விதிக்கட்டும்'' என்று எதிர்காலக் கனவையும் சுட்டிக் காட்டினார்.
சேலம் மாவட்டம் கொளத்தூர் அருகே உள்ள புலியூரில், விடுதலைப் புலிகள் பயிற்சி பெற்ற இடமும், வீர மரணம் அடைந்த போராளி பொன்னம்மானின் நினைவிடமும் இருக்கிறது. இங்கு, பெரியார் திராவிடர் கழகம் நடத்தும் மாவீரர் தினத்தில் தமிழ் உணர்வாளர்களைத் தாண்டி, பொதுமக்களும் குடும்பம் குடும்பமாக வந்து பொன்னம்மான் நினைவிடத்தில் மலர் தூவி, மெழுகுவத்தி ஏற்றி அஞ்சலி செலுத்துவது வழக்கம். இவ்வருட நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக வந்திருந்த பாடலாசிரியர் அறிவுமதியின் பேச்சில் செம காரம்!  
''உலக சூழ்ச்சிகளால் நாம் சுழியமாக மாற்றப் பட்டாலும், இந்தச் சுழியங்களுக்கு முன்னால், எம் தலைவர் மறுபடி யும் ஒன்றென வந்து நிற்பான். அப்போது சுழியங்கள் பத்தாகி, நூறாகி, லட்சமாகி, கோடியாகி ஒரு மகா சமுத்திரத்தின் வெற்றி விடுதலையை எம் தமிழினம் பெறும்.  நான் சங்க இலக்கியம் படித்திருக்கிறேன். புற நானூற்று வீரம் என்பது தமிழ் மன்னர்கள் தமிழ் மன்னரை அடித்த வரலாறுதானே தவிர, இன்னோர் இன எதிரியை ஒழித்த வரலாறு இல்லை. ஆனால், தமிழ் இன வரலாற்றில் முதன் முதலாக... எவன் என் இனத்தின் எதிரி என்று அடையாளம் கண்டு, அதற்குரிய படை கண்டு, அதற்குரிய உலகத்தின் அறங்களை ஏற்றுக்கொண்டுப் போராடிய தமிழினத் தலைவர் என்றால், அது எம் தலைவர் பிரபாகரன்தான். 'அவன் மிகச்சிறந்த வீரன். அவன் தரைப் படை கண்டான்; கடற்படை கண்டான்; வான்படை கண்டான்; கரும்புலி கண்டான்’ என்பது மட்டும்தான் பெரும்பகுதி மனிதர்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டு இருக்கிறது. அவர் கற்றுக்கொடுத்த பண்பாடுகள் மிகவும் உயர்வானவை. அந்த இயக்கத்தைப் போல பண்பாட்டு இயக்கம் வேறு எதுவும் இல்லை. அந்தப் பண்பாட்டுத் தலைவரை உலகத்தின் வேறு எந்தத் தலைவரோடும் ஒப்பீடு செய்ய முடியாது.
அதற்கு ஓர் உதாரணம் சொல்கிறேன்... கீழே கிடந்த சிங்களக் கொடியை எரித்திருக்கிறார் ஒரு புலிப் போராளி. அதைக் கேள்விப்பட்டு, 'புலிக் கொடி என்பது நம் இயக்கத்திற்கும் நம் தேசியத்திற்கும் எவ்வளவு உன்னதமானதோ... அதே போல, சிங்கள மக்களுக்கும், ராணுவத்துக்கும், அந்த நாட்டுக்கும் மதிக்கத்தக்க புனிதமான கொடி அது. அவர்களுக்கும் நமக்கும் உரிமைப் பங்கிடுவதில்தான் போராட்டமே தவிர... மனிதப் பண்பாட்டில் அவர்கள் எந்த இடத்திலும் நம்மைக் கேலி பேசத் துளியும் இடம் கொடுத்துவிடக் கூடாது. அந்தச் சிங்களக் கொடியைப் பார்த்ததும், அதை மதித்து உயரமான இடத்தில் வைத்திருக்க வேண்டும்’ என்று பாடம் நடத்தினார். இப்படி ஒரு பண்பாட்டை வளர்த்தவனா தீவிரவாதி?'' என்று கேள்வி எழுப்பினார்.
தமிழகத்தில் மாவீரர் நாள் கொண்டாட்டம் அடக்கியே வாசிக்கப்பட்டாலும், அண்டை மாநிலமான கர்நாடகத்தில் ஊர் தோறும் போஸ்டர்கள், மஞ்சள் சிவப்பு புலிக் கொடிகள், மாவீரர் தினக் கூட்டங்கள், தேவாலயங்களில் திருப்பலி, கோவில்களில் பூஜை, பள்ளி கல்லூரிகளில் இனிப்பு வழங்கி அசத்தி விட்டார்கள். அதோடு, '57-ம் அகவையில் அடியெடுத்துவைக்கும் தேசியத் தலைவர் பிரபாகரன் பல்லாண்டு வாழ்க’ என்று பிரமாண்ட ஃப்ளெக்ஸ் பேனர்கள் ஆங்காங்கே முளைத்து இருந்தன.  

Save The Indian Rupee ...... it must be our 2012 year resolution.



Save The Indian Rupee ...... it must be our 2012 year resolution.

YOU CAN MAKE A HUGE DIFFERENCE TO THE INDIAN ECONOMY BY FOLLOWING FEW SIMPLE STEPS:-

Please spare a couple of minutes here for the sake of India .

I got this article from one of my friends, but it's true. I can see this in day to day life.

Before 12 months 1 US $ = IND Rs 43
After 12 months, now 1 $ = IND Rs 50

Do you think US Economy is booming? No, but Indian Economy is Going Down.

Our economy is in your hands....

INDIAN economy is in a crisis. Our country like many other ASIAN countries, is undergoing a severe economic crunch. Many INDIAN industries are closing down. The INDIAN economy is in a crisis and if we do not take proper steps to control those, we will be in a critical situation.

More than 30,000 crore rupees of foreign exchange are being siphoned out of our country on products such as cosmetics, snacks, tea, beverages, etc... which are grown, produced and consumed here.

A cold drink that costs only 70 / 80 paisa to produce, is sold for Rs.9 and a major chunk of profits from these are sent abroad. This is a serious drain on INDIAN economy.

We have nothing against Multinational companies, but to protect our own interests we request everybody to use INDIAN products only at least for the next two years. With the rise in petrol prices, if we do not do this, the Rupee will devalue further and we will end up paying much more for the same products in the near future.

What you can do about it?
1. Buy only products manufactured by WHOLLY INDIAN COMPANIES.
2. ENROLL as many people as possible for this cause.....

Each individual should become a leader for this awareness. This is the only way to save our country from severe economic crisis. You don't need to give-up your lifestyle. You just need to choose an alternate product.

All categories of products are available from WHOLLY INDIAN COMPANIES.

LIST OF PRODUCTS

COLD DRINKS:-

DRINK LEMON JUICE, FRESH FRUIT JUICES, CHILLED LASSI (SWEET OR SOUR), BUTTER MILK, COCONUT WATER, JAL JEERA, ENERJEE, and MASALA MILK...

INSTEAD OF COCA COLA, PEPSI, LIMCA, MIRINDA, SPRITE

BATHING SOAP:-
USE CINTHOL & OTHER GODREJ BRANDS, SANTOOR, WIPRO SHIKAKAI, MYSORE SANDAL, MARGO, NEEM, EVITA, MEDIMIX, GANGA , NIRMA BATH & CHANDRIKA

INSTEAD OF LUX, LIFEBUOY, REXONA, LIRIL, DOVE, PEARS, LESANCY, CAMAY, PALMOLIVE

TOOTH PASTE:-
USE NEEM, BABOOL, PROMISE, VICO VAJRADANTI, PRUDENT, DABUR PRODUCTS, MESWAK

INSTEAD OF COLGATE, CLOSE UP, PEPSODENT, CIBACA, FORHANS, MENTADENT.

TOOTH BRUSH: -
USE PRUDENT, AJANTA , PROMISE

INSTEAD OF COLGATE, CLOSE UP, PEPSODENT, FORHANS, ORAL-B

SHAVING CREAM:-
USE GODREJ, EMAMI

INSTEAD OF PALMOLIVE, OLD SPICE, GILLETE

BLADE:-
USE SUPERMAX, TOPAZ, LAZER, ASHOKA

INSTEAD OF SEVEN-O -CLOCK, 365, GILLETTE

TALCUM POWDER:-
USE SANTOOR, GOKUL, CINTHOL, WIPRO BABY POWDER, BOROPLUS

INSTEAD OF PONDS, OLD SPICE, JOHNSON'S BABY POWDER, SHOWER TO SHOWER

MILK POWDER:-
USE INDIANA, AMUL, AMULYA

INSTEAD OF ANIKSPRAY, MILKANA, EVERYDAY MILK, MILKMAID.

SHAMPOO:-
USE LAKME, NIRMA, VELVETTE

INSTEAD OF HALO, ALL CLEAR, NYLE, SUNSILK, HEAD AND SHOULDERS, PANTENE

MOBILE CONNECTIONS:-
USE BSNL, AIRTEL

INSTEAD OF HUTCH

Food Items:-
Eat Tandoori chicken, Vada Pav, Idli, Dosa, Puri, Uppuma

INSTEAD OF KFC, MACDONALD'S, PIZZA HUT, A&W

Every INDIAN product you buy makes a big difference. It saves INDIA. Let us take a firm decision today.

BUY INDIAN TO BE INDIAN - We are not against of foreign products.

WE ARE NOT ANTI-MULTINATIONAL. WE ARE TRYING TO SAVE OUR NATION. EVERY DAY IS A STRUGGLE FOR A REAL FREEDOM. WE ACHIEVED OUR INDEPENDENCE AFTER LOSING MANY LIVES.

THEY DIED PAINFULLY TO ENSURE THAT WE LIVE PEACEFULLY. THE CURRENT TREND IS VERY THREATENING.

MULTINATIONALS CALL IT GLOBALIZATION OF INDIAN ECONOMY. FOR INDIANS LIKE YOU AND ME, IT IS RE-COLONIZATION OF INDIA. THE COLONIST'S LEFT INDIA THEN. BUT THIS TIME, THEY WILL MAKE SURE THEY DON'T MAKE ANY MISTAKES.

WHO WOULD LIKE TO LET A "GOOSE THAT LAYS GOLDEN EGGS" SLIP AWAY?

PLEASE REMEMBER: POLITICAL FREEDOM IS USELESS WITHOUT ECONOMIC INDEPENDENCE

RUSSIA, S.KOREA, MEXICO - THE LIST IS VERY LONG!! LET US LEARN FROM THEIR EXPERIENCE AND FROM OUR HISTORY. LET US DO THE DUTY OF EVERY TRUE INDIAN.

FINALLY, IT'S OBVIOUS THAT YOU CAN'T GIVE UP ALL OF THE ITEMS MENTIONED ABOVE. SO GIVE UP AT LEAST ONE ITEM FOR THE SAKE OF OUR COUNTRY!

We would be sending useless forwards to our friends daily. Instead, please forward this note to all your friends to create awareness...!!

"LITTLE DROPS MAKE A GREAT OCEAN."

PLEASE TRY TO BE AN INDIAN.....
Every True Indian Pls Share This Post....

THANK YOU…LOVE YOU India…!! ♥♥♥
Let's Spread this info...!!

Thursday, December 1, 2011

ஜப்பானில் வாழ்கிறது தமிழ்!


இதுவும் தமிழனின் சாதனையே...
'தேமதுரத் தமிழோசை உலகமெல்லாம் பரவும் வகை செய்தல் வேண்டும்’ என்ற பாரதியின் கனவை மெய்ப்படச் செய்கிறார் சேலம் - ஓமலூரைச் சேர்ந்த முத்து. இவரால் தமிழ் வளர்வது ஜப்பானில்!
 ''நான் இன்டர்மீடியட் முடித்து பஞ்சாயத்து உதவியாளராகப் பணிபுரிந்தேன். 1942-ல் 'வெள்ளையனே வெளியேறு’ போராட்டத்தில் ஈடுபட்டு வேலையை உதறித் தள்ளினேன். இப்போதைய ஃபேஸ்புக் நண்பர்களைப் போல, அப்போது பேனா நண்பர்கள் இருப்பதும் தங்களுக்குள் நட்பு வளர்த்துக்கொள்வதும் வழக்கம். அப்படி என் மகன் சேகரின் பேனா நண்பராக இருந்தவர்தான் ஜப்பான், ஷீமாடா நகரைச் சேர்ந்த சூஜோ மாட்சுனுகா.
1981-ல் மதுரையில் நடைபெற்ற ஐந்தாம் உலகத் தமிழ் மாநாட்டில் கலந்துகொள்வதற்காகத் தமிழகம் வந்தார் சூஜோ. 'ஒரு ஜப்பானியன் பார்வையில் திருக்குறளும் திருவள்ளுவரும்’ என்ற தலைப்பில் பேச வந்தவரை, என் மகன் சேகர் எங்கள் வீட்டுக்கு அழைத்துவந்தான். தமிழ் இலக்கியம், தமிழர்களின் கலாசாரம், வரலாறு பற்றி நீண்ட நேரம் என்னுடன் உரையாடினார். அவர் ஜப்பான் மொழியில் எழுதிய 'இந்திய இலக்கியங்கள்’ என்ற நூலைக் காட்டினார். அதில் திருக்குறள் பற்றி ஒரு சில வரிகளே இருந்தன. அப்போது நான், 'நீங்கள் திருக்குறள் பற்றி ஜப்பான் மொழியில் விரிவாக எழுத வேண்டும். எங்கள் தமிழ் இலக்கியப் படைப்புகளை ஜப்பானிய மொழியில் அறிமுகப்படுத்த வேண்டும்’ என்று கேட்டுக்கொண்டேன். கட்டாயம் செய்வதாக வாக்குறுதி அளித்துச்சென்றார். அப்போது முதல் 36 ஆண்டுகளாக எங்கள் கடித நட்பு தொடர்கிறது.  
ஜி.யு.போப் மொழிபெயர்த்த திருக்குறள் ஆங்கிலப் பிரதியை வாங்கி அவருக்கு அனுப்பினேன். அவ்வப்போது மொழிபெயர்ப்பில் அவருக்கு ஏற்படும் சந்தேகங்களைக் கடிதங்கள் மூலம் நிவர்த்தி செய்தேன். சூஜோ, திருக்குறளை ஜப்பான் மொழியில் முழுமையாக மொழிபெயர்த்து முடித்தார். அடுத்ததாக, 'ஜப்பான் மக்களுக்கு பாரதியாரைத் தெரியுமா?’ என்று கேட்டேன். 'காந்தியடிகள், ரவீந்திரநாத் தாகூர், சுபாஷ் சந்திரபோஸ் ஆகியோரை ஜப்பானியர்களுக்குத் தெரியும். ஆனால், பாரதியாரைப் பற்றி தெரிய வாய்ப்பு இல்லை’ என்றார் சூஜோ. நான் பாரதியாரைப் பற்றி அவரிடம் விளக்கி, பாரதியின் கவிதைகளை ஜப்பான் மொழியில் மொழிபெயர்க்கச் சொன்னேன். பாரதியார் கவிதைகளின் ஆங்கிலப் பிரதியையும் அனுப்பி வைத்தேன். இப்படியே ஜப்பான் மொழியில் திருக்குறள், பாரதி கவிதைகள், வள்ளலார் பாடல்கள், நாலடியார், மணிமேகலை, சிலப்பதிகாரம் எனத் தமிழ் இலக்கியங்களை அவருக்கு அனுப்பி வைத்தேன். சூஜோவும் தீராத ஆர்வம் கொண்டு மொழிபெயர்த்தார். தவிர, நம்முடைய தமிழ்ச் சமூகத்து திருமணம், காது குத்து, பெண்கள் பூப்பெய்தல், இறப்புச் சடங்குகள் அனைத்தையும் புகைப்படங்கள் எடுத்து, அதற்கான விளக்கத்தையும் ஆங்கிலத்தில் எழுதி, ஜப்பானிய மொழியில் மொழிபெயர்க்க அவருக்கு உதவினேன்.  ஜப்பானியர்கள் திருக்குறளை ஆர்வமாகப் படிக்கிறார்களாம். ஜப்பானில் ஒரு மகளிர்க் கல்லூரியில் திருக்குறளை ஒரு பாடமாகவே வைத்து உள்ளனர் என்ற தகவலை சூஜோ சொன்னபோது, நான் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. பாரதியின் குயில் பாட்டும், 'வள்ளலார் வாய்ஸ்’ என்ற நூலும் ஜப்பானில் அமோக வரவேற்பைப் பெற்றுள்ளன. ஜப் பானில் சில புத்த விஹார்களில் வள்ளலார் புத்தகங்களை வைத்தும் வணங்குகிறார்களாம். 'சமத்துவம், ஜீவகாருண்யம், அனைவரிடத்திலும் அன்பு பேணுதல் ஆகியவற்றில் புத்தர் மற்றும் வள்ளலாரின் கருத்துகள்  ஒரே மாதிரியானவை’ என்று சூஜோ அடிக்கடி என்னிடம் சொல்வார். இதை எல்லாம்விட, சூஜோ செய்த ஒரு விஷயம் என்னை மிகவும் நெகிழவைத்துவிட்டது. 'தமிழ் இலக்கியங்களை ஜப்பான் மொழியில் மொழிபெயர்க்க, தமிழகத்தைச் சேர்ந்த முத்து என்பவர் எனக்கு மிகவும் உதவினார்’ என்று சூஜோ ஜப்பான் அரசிடம் பரிந்துரை செய்ததன் விளைவு, ஜப்பான் அரசு 2007-ம் ஆண்டு என் உருவப்படம் பொறித்த தபால் தலையை வெளியிட்டது. இது ஜப்பான் மதிப்பில் 80 'யென்’. நம் நாட்டு மதிப்பில் 27 ரூபாய். சூஜோ தமிழ் மொழியின் சிறந்த படைப்புகளை ஜப்பானியர்களிடம்  பரப்பியதுபோல, நானும் ஜப்பானில் உள்ள சிறுகதைகளைத் தொகுத்து, 'ஜப்பானிய தேவதைக் கதைகள்’ என்ற தலைப்பில், தமிழில் புத்தகமாக எழுதி வெளியிட்டு உள்ளேன். 'மனித நாற்காலி’, 'முன்னொரு காலத்தில் ஜப்பானில்’ என்ற தலைப்புகளிலும் ஜப்பானிய இலக்கியங்களைத் தமிழில் மொழிபெயர்த்துள்ளேன்'' என்கிறார் முத்து.
தலைவணங்குவோம் இந்தத் தமிழருக்கு!

சினிமாக்காரர்களோடு விலகியே இருக்கிறேன்!


'அன்னக்கொடியும் கொடி வீரனும்’ படப் பிடிப்புக்காக தேனியிலேயே தங்கி இருக்கிறார் இயக்குநர் அமீர். 'கட்டுவிரியனாக’க் கிராமத்து மனிதர்களோடு ஒன்றிவிட்ட அமீரை ஓரங்கட்டிப் பேசினேன்.
 ''கிராமத்துலயே தங்கிட்டீங்க... 'கட்டுவிரியன்’ கேரக்டருக்குக் கடுமையான ஹோம்வொர்க்கோ?''
''அதுவும்தான். ஆனா, அது மட்டும் இல்லை அடுத்து கிராமப் படம்தான் நிச்சயம் இயக்கப்போறேன். அதுக்காக நிறையப் பேரைச் சந்திக்கிறேன். நிறையப் பேசுறேன். அவங்களோட கோபம், சந்தோஷம், பிரச்னை எல்லாத்தையும் புரிஞ்சுக்க முடியுது. ஏதோ என்கிட்ட சொன்னவுடனே அவங்க பிரச்னை தீர்ந்துடும்கிற மாதிரி மனசுவிட்டுப் பேசறாங்க. என்னால என்ன செய்ய முடியும்? மக்கள் எல்லா விஷயங்களுக்கும் யாரையாவது எதிர்பார்த்துக்கிட்டே இருக்காங்க. பிரச்னையை எதிர்த்து அவங்களேதான் போராடணும். அதை அவங்களுக்கு என்னால் முடிஞ்ச மட்டும் புரிய வெச்சுட்டு இருக்கேன். போராட்டம் இல்லாம எதுவும் சுலபமாக் கிடைக்காது. தமிழ்நாட்டு மக்களுக்குப் போராடும் குணம் இன்னும் அதிகம் தேவை!''
''விலைவாசி ஏற்றம், வேலைப் பளு, குடும்பப் பிரச்னைகளுக்கு மத்தியில், மக்கள் எங்கே போய்ப் போராடுறது? இப்போ ஒவ்வொரு நாளும் பிழைப்பைத் தள்றதே போராட்டமால்ல இருக்கு?''
''வெளியே சுதந்திரமா உலவிட்டு இப்படிச் சொல்றீங்க? தமிழகத்தில் மொத்தம் ஒன்பது சிறைச்சாலைகள் இருக்கு. விசாரணைக் கைதி களே 10 வருஷம் ஜெயில்ல இருக்க வேண்டி இருக்கு. விசாரணை முடிந்து தீர்ப்பு சொல்லும் போது, அவருக்கு அஞ்சு வருஷம் ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டா, உடனே விடுதலை பண்ணிருவாங்க. ஆனா, கூடுதலா ஜெயில்ல அவர் இருந்த அஞ்சு வருஷத்தை யார் திரும்பக் கொடுப்பா? ஒருவேளை அவர் நிரபராதினு தீர்ப்பு வந்தா, அவர் இழந்த அந்த 10 வருட வாழ்க்கைக்கு யார் பொறுப்பு? இதுக்கு நீங்க என்ன பதில் சொல்வீங்க?
நம்ம மக்களுக்கு மூணு வேளை சோறும், டி.வி-யில் ஃபேவரைட் ஹீரோவோட பாட்டும் போட்டா போதும். உலகத்தில் பிரச்னையே இல்லைனு சொல்லிருவாங்க. நம்மளைச் சுத்தி என்ன நடக்குதுனு தெரிஞ்சுக்கணும். எங்கே தப்பு நடந்தாலும் தட்டிக் கேட்கணும். யாருக்கோ பிரச்னைனு வேடிக்கை பார்க்கக் கூடாது. அப்படி இருந்தா நாளைக்கு நமக்கே பிரச்னைன்னா, எல்லாரும் கைகட்டி அமைதியா வேடிக்கை பார்ப்பாங்க!''
''கோடம்பாக்கத்தில் உங்களுக்கு நெருக்கமான நண்பர்கள்னு யாருமே இல்லைபோல... ஏன்?''  
''சினிமாவோட சேர்ந்துதான் இருக்கேன்.  சினிமாக்காரர்களோடதான் விலகி இருக்கேன். இங்கே சினிமாங்கிறது வெறும் ஹீரோக்களை உருவாக்கும் இடமா மட்டுமே இருக்கு. மக்களுக்கான சினிமாங்கிறது தூரத்துல... கனவா இருக்கு. நாலு ஃபைட், ரெண்டு பாட்டுதான் மாஸ் ஹீரோக்களுக்கான அடையாளம். அதில் எனக்கு உடன்பாடு இல்லை. அதான் விலகியே இருக்கேன்!''

ஏன் இந்த கொல வெறி?


'வொய் திஸ் கொல வெறி’ என்ற ஒரே பாடலின் மூலம் பிரபலத்தின் உச்சம் தொட்டிருக்கும் அறிமுக இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர். அமிதாப் பச்சன், ஆனந்த் மஹிந்திரா தொடங்கி சர்வதேசப் பிரபலங்கள் வரை பலரும் இந்தப் பாட்டுக்குப் பாராட்டுத் தெரிவிக்க, இணையத்தில் காட்டுத் தீயாகப் பற்றி எரிகிறது பாடல்.    
 அனிருத்துக்கு வயசு 21. ஆளே ஜீன்ஸ் மாட்டிய கிடார் மாதிரிதான் இருக்கிறார். செம குறும்புப் பையன் என்பது பேசும்போது புரிகிறது. ஜஸ்ட் லைக் தட் ஜெனரேஷன்!
''ம்ம்ம்... என் அம்மாகிட்ட கேட்டா, மூணு வயசுலயே ஏதாவது பாட்டு கேட்டா பொம்மை கீ-போர்டில் நானே டியூன் போடுவேன்னு சொல்வாங்க. நாலு வயசுலயே பியானோ கத்துக்கிட்டேனாம். சென்னையில் டிரினிட்டி காலேஜ் ஆஃப் லண்டன் நடத்தும் இசைத் தேர்வுகளில் எல்லா கிரேடும் முடிச்சிட்டேன். பத்ம சேஷாத்ரியில் படிச்சப்போ, கர்னாடிக் மியூஸிக் கத்துக்கிட்டேன். லயோலா கல்லூரியில் பி.காம். படிச்சப்ப, ராக் பேண் டில் இருந்தேன். அதனால், 20 வயசுக்குள்ளேயே ஒரு மாதிரி எல்லாவிதமான இசையிலும் நல்ல அனுபவங்கள் கிடைச்சது. சன் டி.வி. நடத்திய 'ஊலல்லா’ மியூஸிக் ஷோவில் ஏ.ஆர்.ரஹ்மான் சார் கையால் 'சிறந்த இசையமைப்பாளர்’ விருது வாங்கினேன். அதுதான் செம ஓப்பனிங். ஐஸ்வர்யா மேடத்தோட மாமா பையன் நான். காலேஜ் சமயமே ஐஸ்வர்யா மேடம் எடுத்த 12 குறும்படங்களுக்கும் நான்தான் மியூஸிக் பண்ணேன். அந்த நம்பிக்கையில்தான் '3’ படத்துக்கு என்னை மியூஸிக் பண்ணச் சொல்லிட்டாங்க!''
''ஓ.கே. மேக்கிங் ஆஃப் 'வொய் திஸ் கொல வெறி’ சொல்லுங்க?''
''அது வந்து... காதல் தோல்வியில் ஒரு பையன் புலம்புறதுதான் சிச்சுவேஷன்னு ஐஸ்வர்யா மேடம் சொன் னாங்க. 100 பசங்கள்ல 90 பசங்க இதை அனுபவிச்சு இருப்போம். ரெண்டு, மூணு நிமிஷத்துக்குள்ளேயே மனசுக்குள்ள ஒரு டியூன் ஓட ஆரம்பிச்சது... சும்மா அப்ப டியே கீ-போர்டில் வாசிச்சேன். ஐஸ்வர்யா மேடத்துக்கு அது ரொம்பப் பிடிச்சுப் போச்சு. உடனே, தனுஷ் சாருக்கு போன்ல சொல்லவும்... அவர் 10 நிமிஷத்துல ஸ்டுடியோ வந்துட்டார். டியூனைக் கேட்டுட்டு, 'வொய் திஸ் கொல வெறிடி’னு பாட ஆரம்பிச்சார். தமிழும் இங்கிலீஷ§ம் கலந்து சிம்பிள் அண்ட் ஸ்வீட்டா இருந்தது. உடனே, வரிகளை அப்படியே டெவலப் பண்ணச் சொன்னோம். 'லவ்வு லவ்வு ஓ மை லவ்வு’னு ஆரம்பிச்சு கடைசி யில 'ஃப்ளாப் ஸாங்’னு முழுப் பாட்டையும் 25 நிமிஷத்துக்குள் முடிச்சிட்டோம். ஜஸ்ட் லைக் தட் பாட ஆரம்பிச்சதால், இப்போ வரை இந்தப் பாட்டுக்குனு லிரிக்ஸ் ஷீட்னு ஒண்ணு இல்லவே இல்லை!''  
''அது என்ன சூப் ஸாங்?''
''லவ்ல மொக்கை வாங்கின பசங்களுக்கு ஏதாவது பேர் வைக்கலாம்னு யோசிச்சப்ப, 'சூப் பாய்ஸ்’னு தனுஷ் சார் வெச்ச பேர் அது!''
''தமிழ் சினிமா இசையமைப்பாளர்கள் யாராவது பாராட்டினாங்களா?''
''இல்லை... இதுவரை இல்லை!''
''உங்க ரோல் மாடல் யார்?''
''நைன்டீஸ் ஜெனரேஷன் என்பதால், ஏ.ஆர்.ரஹ்மான் சார்தான் என் ரோல் மாடல். இளையராஜா சார் மியூஸிக்கும் ரொம்பப் பிடிக்கும்!''
''முதல் பாட்டே செம ஹிட். மத்த பாடல்களுக்கு இந்த எதிர்பார்ப்பே நெகட்டிவ்வா இருக்குமே...''
''அந்தப் பதற்றம் கொஞ்சம் இருக்குதான். ஆனா, 'கொல வெறி’ மாதிரி இன்னொரு பாட்டு '3’ படத்தில் இல்லை. அதனால், நிச்சயம் எல்லாப் பாடல்களுமே ஹிட் ஆகும். படத்தில் அஞ்சு பாடல்களை தனுஷ் எழுதியிருக்கார். ஒரு பாட்டு ஐஸ்வர்யா எழுதி இருக்காங்க. எப்பவும் ஃபாஸ்ட் நம்பர்ஸ் மட்டுமே பாடிட்டு இருந்த ஸ்ருதி மேடம், இதில் ஒரு ஸ்லோ டியூன் பாடி இருக்காங்க. நான் ஒரு பாட்டு பாடி இருக் கேன். டூயட், கிளப் ஸாங், குத்துனு எல்லாப் பாட்டுமே வேற வேற ஸ்டைல். '3’ படத்தின் மியூஸிக் தமிழ் மியூஸிக்ல இது வரைக்கும் வராதவை. அது வொர்க்-அவுட் ஆனா, பயங்கர ஹிட் ஆகும். எனக்குனு ஒரு தனி இடம் கிடைக்கும்!''  

இந்தியா விற்பனைக்கு!


ஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள முக்கியமான சந்தைகளில் ஒன்று... மதுக்கூர் சந்தை. ஒரு குடும்பத்துக்குத் தேவையான எல்லாப் பொருட்களும் கிடைக்கும். சாமான்கள் மிகத் தரமாக வும் விலை வெகு மலிவாகவும் இருக்கும். மதுக்கூர் சந்தையின் முக்கியமான அம்சம், கருவாடும் நல்லெண்ணெயும். ''அட... அந்த நல்லெண்ணெயும் கருவாடும் கூடிக் குழம்புக்குக் கொடுக்கும் ருசியே தனி'' என்பார்கள். தமிழ்நாட்டில் கன்னிவாடி, ஒட்டன்சத்திரம், கொல்லிமலை, பொள்ளாச்சி, வால்பாறை, தேனி, பாவூர்சத்திரம் என்று ஒவ்வொரு பகுதிக் கும் இப்படி ஒவ்வொரு சந்தையின் பெருமையைச் சொல்லிக்கொண்டே போகலாம். இந்தச் சந்தை மரபு இன்று, நேற்றல்ல; பல நூற்றாண்டுகளாகத் தொடர்வது.
 பண்டைய தமிழக அரசர்கள் பத்துப் பதினைந்து கிராமங்களுக்கு மையமாக ஓர் ஊரைத் தேர்ந்தெடுத்து  பெரிய கோயில்களைக் கட்டினார்கள். எங்கெல்லாம் இப்படிப் பெரிய கோயில்களைக் கட்டினார்களோ, அங்கெல்லாம் அருகிலேயே சந்தைகளை அமைத்தார் கள். திருவிழாக்கள், அதையட்டிப் போடப்படும் திருவிழாக் கடைகள்... எல்லாமே சந்தை என்கிற அமைப்பை மக்களின் வாழ்வோடு பிணைக்கும் அம்சங்கள். தமிழகம் மட்டும் அல்ல; இந்தியா முழுக்க இந்த மரபு இருக்கிறது. இந்த மரபின் நீட்சியே இன்றைய கோயம்பேடு சந்தை முதல் தெருவோர மளிகைக் கடைகள் வரை.
இந்தியாவின் முதுகெலும்பு விவசாயம் என்றால், இந்திய விவசாயத்தின் முதுகெலும்பு சில்லறை வர்த்தகம் என்று அழைக்கப்படும் இந்தச் சந்தை முறை. இந்தியாவில் விவசாயத்துக்கு அடுத்து அதிகமானோருக்கு - 5 கோடி பேருக்கு-வேலை அளிக்கும் துறை இது. இந்தியாவின் 6.58 லட்சம் கிராமங்களை 47 ஆயிரம் சந்தைகள் இணைக்கின்றன. நம்முடைய தானிய உற்பத்தியில் 35 சதவிகிதம் நேரடியாகவும் 41 சதவிகிதம் மறைமுகமாகவும், இந்தச் சந்தை அமைப்பின் மூலமாகவே விநியோகிக்கப்படுகிறது.
இந்திய விவசாயத் துறைக்கும் இந்திய சில்லறை வர்த்தகத் துறைக்கும் இதுவரை துரும்பைக்கூட கிள்ளிப்போடாத மன்மோகன் சிங் அரசு, கடந்த வாரம் இரு துறைகளையும் மொத்தமாக விலை பேசும் முடிவை எடுத்துள்ளது. ஏற்கெனவே, வேளாண் மற்றும் தோட்டக்கலைத் துறையில் 100 சதவிகித அந்நிய நேரடி முதலீட்டுக்கு அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில், பல பொருள் சில்லறை வர்த்தகத்தில் 51 சதவிகிதம் அந்நிய முதலீட்டுக்கும் ஒரு பொருள் சில்லறை வர்த்தகத்தில் 100 சதவிகிதம் அந்நிய முதலீட்டுக்கும் அரசு அனுமதி வழங்கி உள்ளது. சுருக்கமாக, இந்திய வேளாண் துறையையும் சில்லறை வர்த்தகத்தையும் வளைத்துப் போட்டுக்கொள்ள வெளிநாட்டுப் பெருநிறுவனங்களுக்கு அனுமதி அளித்துள்ளது. மக்களிடம் இருந்து பெரிய எதிர்ப்பு ஏற்படாத நிலையில், எதிர்க் கட்சிகள், மாநில அரசுகளின் எதிர்ப்பு காலப்போக்கில் கடலில் கரைத்த பெருங்காயமாகிவிடும் என்பதால், இந்த அனுமதி கிட்டத்தட்ட இறுதியாகிவிட்டது.
''இந்திய விவசாயிகள் இடைத்தரகர்கள் குறுக்கீடு இன்றி விளைபொருட்களுக்கு நல்ல விலை பெற அரசின் இந்த முடிவு வழிவகுக்கும்'' என்று தெரிவித்திருக்கிறார் மத்திய வர்த்தக அமைச்சர் ஆனந்த் சர்மா.
அமைச்சர் இடைத்தரகர்கள் என்று குறிப்பிடுவது சந்தையிலும் சாலையிலும் சாக்கு விரித்து தானியங்களை விற்கும் வியாபாரிகளையும் சிறு, குறு மளிகைக் கடைக்காரர்களையும்தான். விவசாயிகளிடத்தில் இருந்து மக்களிடத்தில் பொருட்களைக் கொண்டுசெல்லும் சிறு வியாபாரிகளை இடைத்தரகர்கள் என்று குறிப்பிடுவது முதலாளித்துவச் சொல்லாடல். அமைச்சர் அதைத்தான் பின்பற்றி இருக்கிறார். சரி, இந்த இடைத்தரகர்கள் இல்லை என்றால், எப்படி விவசாயிகளிடத்தில் இருந்து விளைபொருட்கள் மக்களை வந்தடையும்? அந்தச் 'சேவை’க்குத்தான் பன்னாட்டுப் பெருவணிக அங்காடிகளுக்கு சிவப்புக் கம்பளம் விரித்திருக்கிறது அரசு.
இந்திய அரசு இந்த முடிவை எடுத்த அடுத்த நொடி, இதை வரவேற்று அறிக்கை வெளியிட்டு இருக்கிறார் 'வால்மார்ட் இன்டர்நேஷனல்’ நிறுவனத்தின் தலைவரும் முதன்மைச் செயல் அதிகாரியுமான டோ மேக்மில்லன். '' 'வால்மார்ட்’ உள்ளிட்ட நிறுவனங்கள் இந்தியாவுக்குச் சேவையாற்ற இந்த முடிவு வழிவகுக்கும்'' என்று அவர் கூறியிருக்கிறார்.
இந்த நிறுவனங்கள் என்ன 'சேவை’ செய்யும்? விவசாயிகளுடன் நேரடி ஒப்பந்தம் இடும். அவர்களுக்கு இடுபொருட்கள் தரும். கடன் அளிக்கும். விளைபொருட்களை நேரடியாகக் கொள்முதல் செய்து, சந்தை விலையைக் காட்டிலும் குறைவான விலையில் தங்கள் அங்காடிகளில் விற்கும். இது ஆரம்பம்.
முடிவு எப்படி இருக்கும்? விவசாயிகள் கடன் வாங்குவார்கள். விளைச்சல் பொய்க்கும்போது வாங்கிய கடனுக்கு நிலத்தைப் பெறுநிறுவனங்களிடமே ஒப்படைப்பார்கள். இதற்கிடையில், பெருநிறுவனங்களின் விலையுடன் போட்டியிட முடியாமல் சிறு வியாபாரிகள் தொழிலில் இருந்து வெளியேற்றப்படுவார்கள். ஒருகட்டத்தில் பெருநிறுவனங்கள் நிர்ணயிப்பதே விலை என்று ஆகும். விவசாயிகளும் வெளியே விற்க முடியாது. மக்களும் வெளியே வாங்க முடியாது. நல்ல தரமான பொருட்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி ஆகும். இப்போது குப்பை டீ கிடைப்பதுபோல, குப்பை உணவு மட்டுமே நமக்குக் கிடைக்கும். சில்லறை வர்த்தகம் பெருநிறுவனங்களின் ஏகாதிபத்தியத்தின் கீழ் வரும். இப்போது பெட்ரோலிய நிறுவனங்களால் பெட்ரோல் விலை தீர்மானிக்கப்படுவதுபோல, இனி எல்லாப் பொருட்களின் விலைகளும் இந்தப் பெருநிறுவனங்களால் தீர்மானிக்கப்படும். இந்தியச் சந்தைகள் மைதானங்களாகும். இந்திய விவசாயிகளும் வியாபாரிகளும் கூலித் தொழிலாளர் வர்க்கமாக மாறிப்போவார்கள்.
'கிழக்கிந்திய கம்பெனி’யின் வரலாறு ஞாபகத்துக்கு வருகிறதா?

ஈழம் இன்று!


ழம்... இந்த நூற்றாண்டின் சொல்லி மாளாத சோகம்!
 இரண்டரை ஆண்டுகளைக் கடந்த பிறகும், மரண பீதி இன்னும் விலகவில்லை. கடவுளின் வரைபடத்தில்கூட இல்லாத தேசமாகிவிட்டது. சிதைக்கப்பட்ட இடங்களின் சிதிலங்கள் மீது சிமென்ட் பூசி மறைக்கும் காரியங்கள் மட்டும்தான் இந்த 30 மாதங்களில் நடந்துள்ளன. மிச்சம் இருப்பவர்களை உரிமை பெற்றவர் களாக அல்ல... உயிர் உள்ளவர்களாகக்கூட மதிக்க இலங்கை அரசு தயாராக இல்லை என்பதே உலகத்துக்கான சேதி!
இன்னமும் முறியாத முள் வேலி!
'விடுதலைப் புலிகள் மட்டும் அல்ல... மொத்தத் தமிழர்களும் போராளிகள்தான். அவர்களை வெளியே விடுவது ஆபத்து!’ என்று அனைத்துத் தமிழர்களையும் நடுக் காட்டுக்குள் திறந்தவெளிச் சிறைவைத்து... சுற்றிலும் இரும்பு முள் வேலி அமைத்தார் கள். அதில் சுமார் 3 லட்சம் தமிழர்கள் அடைக்கப்பட்டார்கள். இப்படி ஒரு மனித உரிமை மீறல் உலகத்தில் எங்கும் நடந்தது இல்லை என்று ஐ.நா. சபை உள்ளிட்ட அனைத்து நாடுகளும் திரும்பத் திரும்பச் சொல்லி, ஐரோப்பிய ஒன்றியம் இலங்கைக்குப் பொருளாதாரத் தடை விதிக்கும் சூழ்நிலை வந்த பிறகுதான்... வயதானவர்கள், பெண்கள், குழந்தைகளை வெளியே விட்டார்கள். முள் வேலிக்குள் இருப்பவர்களுக்கும் சரியான சாப்பாடு, குடிக்கத் தண்ணீர்கூடக் கொடுக்காமல்விட்டதில் பலரும் நொந்தே செத்துப்போனார்கள். கையில் பணமும் நகையும் வைத்திருந்தவர்கள், அங்கே இருந்த சிங்கள அதிகாரிகளுக்கு அதைக் கொடுத்து வெளி நாடுகளுக்குத் தப்பித்தார்கள். இப்படிப் பலரும், பல வழிகளில் தப்பியது போக.... இன்னமும் கதிர்காமர் மற்றும் ஆனந்த குமாரசாமி ஆகிய இரண்டு முகாம்கள் இருக்கின்றன. கதிர்காமர் முகாமில் 1,017 குடும்பங்களும் ஆனந்த குமாரசாமி முகாமில் 1,262 குடும்பங்களும் என, மொத்தம் 7,540 பேர் மட்டுமே இருப்பதாகக் கடந்த வாரம் இலங்கை நாடாளுமன்றத்தில் ஒரு தகவல் சொல்லப்பட்டுள்ளது.
முகாமைவிட்டு வெளியே வந்து தங்களது சொந்த ஊருக்குச் சென்ற பலருக்கும் அவர்களது வீடு இருந்த சுவடே இல்லை. மரங்கள் உள்ள இடத்தில் டென்ட் போட்டுத் தங்கி இருக்கிறார்கள். அவர்களது சொந்த நிலம் எங்கே என்று கண்டுபிடிக்கவே முடியவில்லை. 'அரசாங்கம் எடுத்துக் கொண்டுவிட்டது. பழைய பத்திரங்கள் செல்லாது!’ என்று சொல்லிவிட்டார்கள். மீன் பிடிக்கக் கடற்கரைக்கும் செல்ல முடியாது. இடிபாடுகள்கொண்ட பழைய கட்டடங்களையும் தெருக்களையும் பார்த்த படியே படுத்துக்கிடக்கின்றன தமிழ்க் குடும்பங்கள். 80 ஆயிரம் விதவைகள், 5,000 உடல் ஊனமுற்றோர் அநாதைகளாக அலைகிறார்கள். எங்கள் குழந்தைகளைக் காணவில்லை என்று குவிந்த புகார்களில் இருந்து 49 குழந்தைகள் மட்டும் மீட்கப்பட்டு உள்ளன. 50 ஆயிரம் வீடுகள் கட்ட இந்தியா கொடுத்த கோடிக்கணக்கான பணத்தைவைத்து இதுவரை 50 வீடுகள்கூடக் கட்டித் தரவில்லை என்கிறார் எம்.பி-யான சீ.யோகேஸ்வரன். 'எங்களை யாரும் கேள்வியே கேட்க முடியாது’ என்பதுதான் ராஜபக்ஷே, தமிழர்களுக்குச் சொல்லும் ஒரு வரிச் செய்தி!
எங்கும் ராணுவமயம்!
''வடக்கு, கிழக்கு மாகாணங்களில் ராணுவத்தின் ஆட்சிதான் நடக்கிறது!'' என்று தமிழ் எம்.பி-க்கள் கூட்டமைப்பு சொல்கிறது. அதை உறுதிப்படுத்துவது மாதிரியே திரும்பிய பக்கம் எல்லாம் ராணுவம்... ராணுவம்... ராணுவம் மட்டுமே!
''போர் முடிந்துவிட்டதே... அப்புறம் எதற்கு ராணுவத்தினரை இந்த அளவுக்கு நிறுத்திவைத்து இருக்கிறீர்கள்? அவர்களை வாபஸ் வாங்க வேண்டியதுதானே?'' என்று தன்னைச் சந்தித்த இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்ஷேவிடம், ஐக்கிய நாடுகள் அவையின் செயலாளர் பான் கீ மூன் கேட்டார். ''அவர்கள்தான் இப்போது தமிழர்களுக்குச் சேவை செய்கிறார்கள். அரசாங்கத்தின் அனைத்துத் திட்டங்களை யும் அமல்படுத்த அவர்களைத்தான் பயன் படுத்துகிறோம்!'' என்றார் ராஜபக்ஷே. துப்பாக்கியை வைத்துக்கொண்டு சமூக சேவை செய்பவர்களை இலங்கையில்தான் பார்க்க முடியும். வடக்கில் போர் முடிந்து இரண்டரை ஆண்டுகள் ஆகின்றன. கிழக்கில் போர் முடிந்து ஐந்து ஆண்டுகள் ஆகிவிட்டன. ஆனால், யாழ்ப்பாணத்தில் போர் முடிந்து பல ஆண்டுகள் ஆகிவிட்டன. அப்படிப்பட்ட யாழ்ப்பாணத்திலேயே இன்னும் 44 ஆயிரம் ராணுவ வீரர்கள் இருப்பதாக, அந்த மாவட்டத்து எம்.பி. சொல்கிறார். அதன் மொத்த மக்கள் தொகையே 6 லட்சம்தான்!
இலங்கை முழுவதும் ஆறு ராணுவப் படைத்தளங்கள் உள்ளன. அதில் நான்கு, தமிழர் பகுதிகளான யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வன்னி ஆகிய இடங்களில் உள்ளன. ராணுவத்தின் 17 டிவிஷன்கள் அங்கு உள்ளன. சிங்களப் பகுதியில் நான்கு டிவிஷன்கள் மட்டுமே இருக்கின்றன. 'இன்னமும் தமிழ் மக்கள் மத்தியில் பதற்றத்தை உருவாக்குவதற்காகவே இவர்களை நிறுத்திவைத்து இருக்கிறார்கள்!’ என்று தமிழ் எம்.பி-க்கள் நாடாளுமன்றத்தில் குற்றம் சாட்டுகிறார்கள்!
சிங்களமயமாகும் தமிழ் நிலம்!
''வடக்கும் கிழக்கும் தமிழர் பெரும்பான்மையாக வாழும் இடம். எனவே, இது தமிழர் தாயகம். இவை இரண்டையும் இணைத்து தமிழ் ஈழம் அமைப்போம்!'' என்பதுதான் தமிழர்கள் இதுநாள் வரை வைத்த கோரிக்கை. வடக்கிலும் கிழக்கிலும் சிங்களவர்களைப் பெரும்பான்மை ஆக்கிவிட்டால்? தமிழர் தாயகம், இணைப்பு, தமிழ் ஈழம் என்ற கோரிக்கையே செல்லாததாக ஆகிவிடும் அல்லவா? ராஜபக்ஷேவின் திட்டம் இதுதான். இப்போது தமிழர் பகுதியில் இதுதான் நடக்கிறது.
தமிழர் கையில் இருந்த நிலங்களை வித்தியாசமான தந்திரத்தின் மூலம் பறிக்கிறார்கள். 'ஊர்க் காவல் படைக்கு இடம் வேண்டும்’, 'ராணுவத்துக்கு இடம் வேண்டும்’ என்று சொல்லி, மொத்தமாக அரசாங்கம் எடுத்துக்கொள்கிறதாம். பிறகு, இந்த இடங் கள் ராணுவ வீரர்களுக்குத் தரப்படுகின்றன. அவர்கள் சிங்கள மக்களுக்கு விற்பனை செய்கிறார்கள். பல்வேறு இடங்களில் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் இந்த மாதிரி கையகப்படுத்தப்பட்டு சிங்களவர்களுக்குத் தாரைவார்க்கப்படுகின்றன. ''புதிய முகாம் அமைத்தல், ராணுவத்துக்கான இடவசதிகள், ராணுவத்தின் தேவைகள் ஆகியவற்றுக்காக காணிகளை எடுப்பது என இடங்கள் பறிக்கப்படுகின்றன. மக்கள் தங்களது சொந்த இடங்களுக்குச் சென்று தங்களது வாழ்க்கையைத் தொடங்க முடியாமல், அவர்களது வாழ்க்கையே ஆக்கிரமிக்கப்பட்டுவிட்டது!'' என்கிறார் தமிழ்த் தலைவர்களில் ஒருவரான இரா.சம்பந்தம். இதனால், ஓமந்தை என்ற இடம் 'ஓமந்த’ என்ற சிங்கள உச்சரிப்புடன் சொல்லப்படுகிறது. கொச்சன்குளம் என்ற ஊர் 'கால பொவசெவெள’ என்று மாற்றப்பட்டு விட்டது. தமிழில் எழுதப்பட்ட பலகை கள் அழிக்கப்பட்டு... சிங்களம், ஆங்கிலத் தில் எழுதப்படுகின்றன. கிளிநொச்சியில் பிரதான தெருவுக்கு 'மகிந்த ராஜபக்ஷே மாவத்தை’ என்று சூட்டப்பட்டு உள்ளது. இந்து, கிறிஸ்துவக் கோயில்கள் இடிந்த நிலையில் கிடக்க... புத்த விகாரைகள் புத்துணர்வு பெற்று எழுகின்றன!
நடுங்கும் ராஜபக்ஷே!
''இலங்கைக்கு உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் தொடர்ந்து அச்சுறுத்தல் இருக்கிறது. எந்த நாட்டுக்குச் சென்றாலும் என் மீது தாக்குதல் நடப்பதற்கான சூழல் இருக்கிறது. அதனால்தான் ராணுவ பலத்தை நான் அதிகப்படுத்தி வருகிறேன்!'' என்று கொழும்பு கல்லூரி ஒன்றின் பட்டமளிப்பு விழாவில் அதிபர் ராஜபக்ஷே பேசும்போது சொன்னார். இலங்கைப் பகுதியில் அதிக அளவில் விழாக்களில் அவர் பங்கேற்பது இல்லை. பெரும்பாலும் அலரி மாளிகை விழாக்களில் மட்டுமே கலந்துகொள்கிறார். லண்டனுக்கு அவர் சென்றிருந்தபோது புலம்பெயர் ஈழத் தமிழர்கள், அவர் தங்கி இருந்த இடத்தைச் சுற்றி வளைத்தபோது 'எப்படித் தப்பினார்?’ என்று வெளியே தெரியாத அளவுக்கு கொழும்பு வந்து குதித்தார். இதன் பிறகு அவரது வெளிப் பயணங்கள் பலதும் தள்ளிவைக்கப்பட்டன!
அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட பல நாடுகளில் ராஜபக்ஷே மீது 'போர்க் குற்றவாளி’ என்று குற்றம்சாட்டும்  வழக்குகள் பாய்ந்துவருகின்றன. இதனாலும் பயணங்கள் தள்ளிவைக்கப்படுகின்றன. ராஜபக்ஷேவுக்கு அடுத்த நிலையில் அவரது தம்பி பசில் வருவாரா அல்லது அவரது மகன் நிமல் வருவாரா என்ற உள்வீட்டுக் குழப்பம் இப்போதே தொடங்கிவிட்டது. தனது மகனைக் கொண்டுவர வேண்டும் என்பதில் மகிந்தாவின் மனைவி ஆர்வமாக இருக்கிறார். விடுதலைப் புலிகள் பேரால் கூறப்படும் ஆபத்து ஒரு பக்கம் இருந்தாலும், நிதி நெருக்கடி காரணமாக இலங்கை அதிகப்படியான கடன் சுமைகளில் மூழ்கிவருவதும்... இதனால் பொருட்களின் விலை அதிகமாகி வருவதும் சிங்கள மக்கள் மத்தியில் கடும் கோபத்தை உருவாக்கி உள்ளன. என்ன ஆனாலும் பரவாயில்லை என்று ராணுவத்துக்கு மட்டும் 229.9 மில்லி யன்  ஒதுக்கிவிட்டு உட்கார்ந்துவிட்டார் ராஜபக்ஷே. நாடாளுமன்றத்தில் இந்த பட்ஜெட் மீதான விவாதம் நடந்துகொண்டு இருந்தபோது, பார்வையாளர் மாடத்தில் இருந்து ஒருவர் தண்ணீர் பாக்கெட்டைத் தூக்கிப் போட... வெடிகுண்டு விழுந்ததைப் போல அத்தனை பேரும் பதறிப்போனார் கள். அனைவரையும்விட அதிகமாகப் பதறியவர் ராஜபக்ஷே!
கண்துடைப்பு கமிஷன்!
''ராஜபக்ஷே மீது போர்க் குற்ற வழக்கைப் பதிவுசெய்துக் கைது செய்'' என்பதுதான் உலகெங்கும் வாழும் தமிழர்களின் குரல். இதற்கு அவர் சொன்ன பதில், ''இலங்கையில் போர் விதிமீறல் நடந்திருக்கிறதா என்று நாங்களே ஆய்வு நடத்தி, அப்படித் தவறு செய்தவர்களைக் கண்டிப்போம்!'' என்பது. அதாவது, இலங்கை ராணுவத்தினர் செய்த தவறுகளை இலங்கை அரசே விசாரிக்கும் காமெடி இது!
'கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக் குழு’ என்று இதற்குப் பெயர். 338 பக்கம்கொண்ட இந்தக் குழுவினரின் அறிக்கை ராஜபக்ஷேவிடம் கடந்த 20-ம் தேதி தரப்பட்டது. ''மொத்த சம்பவங்களைப் பூசிமெழுகும் காரியம் இது'' என்று கொழும்பு பத்திரிகையாளர்கள் சொல்கிறார்கள். சிங்கள மொழி பேசியபடியே தமிழ்ப் பெண்களைக் கற்பழிக்கும் காட்சியும்... தமிழ் இளைஞர்களை ராணுவத்தினர் நிர்வாணமாக்கி, கண்ணைக் கட்டி சுட்டுக் கொல்லும் காட்சியும்... சேனல் 4 தொலைக்காட்சியில் ஒளி பரப்பானது. உலகத்துக்கு உண்மையைச் சொன்ன ஒரு சில நிமிடங்கள் அவைதான். அந்தக் காட்சியே பொய்யா னது என்று இந்த அறிக்கை சொல்கிறதாம். ''ராணுவத் துக்கு வேறு வழி இல்லை. பொதுமக்களைப் பாதுகாக்க வேண்டும் என்று ராணுவம் நினைத்திருந்தால், தீவிரவாதிகளது கை ஓங்கி இருக்கும்!'' என்று காரணமும் சொல்கிறதாம். அதையும் மீறிச் சில சம்பவங்கள் நடந்திருந்தால், அதற்கு சரத் ஃபொன்சேகாவும் அவரது ஆதரவு ராணுவ அதிகாரிகள் சிலரும்தான் காரணம் என்று கைகாட்டுகிறதாம் இந்த அறிக்கை. நாடாளுமன்றத்தில் இன்னமும் தாக்கல் செய்யப்படாத அந்த அறிக்கையின் சில தகவல்களை சிங்களப் பத்திரிகைகள் வெளியிட ஆரம்பித்து உள்ளன. ''இந்த அறிக்கையை ஏற்க முடியாது!'' என்று சிங்களக் கட்சிகளே சொல்ல ஆரம்பித்துஉள்ளன!
எப்படி இருக்கிறார் ஃபொன்சேகா?
மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனை பெற்ற சரத் ஃபொன்சேகா, கொழும்பு வெலிக்கடைச் சிறையில் இருக்கிறார். அவரது விடுதலைக்காக எடுக்கப்பட்ட அத்தனை முயற்சிகளும் பொய்த்துவிட்டன. தனக்கு விதிக்கப்பட்ட மூன்று ஆண்டுத் தண்டனையை எதிர்த்து அப்பீல் செய்தார் ஃபொன்சேகா. யார் இந்தத் தண்டனையைக் கொடுத்தாரோ... அதே நீதிபதிக்குப் பதவி உயர்வைக் கொடுத்து, அந்த அப்பீல் மனுவையும் அவரையே விசாரிக்கச் சொல்லிவிட்டார் ராஜபக்ஷே. பிரிந்த இந்த இரண்டு மாஜி நண்பர்களுக்குள் நடக்கும் அரசியல்தான் இன்றைய இலங்கை அரசியல். ''என் கணவரைக் காப்பாற்றுங்கள்!'' என்று ஃபொன்சேகாவின் மனைவி தான் தினமும் அறிக்கை விடுகிறார். ஃபொன் சேகாவை எப்போது எல்லாம் மருத்துவமனையில் காட்ட வேண்டுமோ... அப்போது எல்லாம் ஏதாவது ஒரு காரணத்தைச் சொல்லி, அங்கு அழைத்துச் செல்ல மறுத்துவிடுகிறார்களாம். இந்த நிலையில், ஃபொன்சேகாவின் விடுதலைக்காக சிங்க ளக் கட்சிகளை ஒன்றுதிரட்ட முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே குரல் கொடுத்துள்ளார். உடனே, ரணில் மீது அபாண்டமான குற்றச்சாட்டுகளைச் (ஹோமோ செக்ஸ் மாதிரியான புகார்கள்) சொல்லிக் கேவலப்படுத்தும் காரியங்கள் தொடங்கி இருக்கின்றன. 'ஃபொன்சேகா உயிரோடு வெளியே வர மாட்டார்!’ என்கிற அளவுக்கு அவருக்கு நெருக்கடிகள்ஏற்பட்டு விட்டனவாம்!
பேசிப்பார்க்கும் தமிழ் எம்.பி-க்கள்!
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ற பெயரில் அணி திரண்டுள்ள தமிழ் எம்.பி-க்கள் மட்டும்தான் ஈழத் தமிழர்களுக்காக அந்த மண்ணில் இருந்தபடி தயங்காமல் பேசுகிறவர்கள். நாடாளுமன்றத்திலும் இவர்கள் பேச்சு நம்பிக்கை தருவதாக உள்ளது. பயன் இருக்கிறதோ இல்லையோ, இலங்கை அரசாங்கத்துடன் தொடர்ந்து பேச்சுவார்த்தையில் இருக்கிறார்கள். இதுவரை 13 முறை இவர்கள் பேசி இருக்கிறார்கள். டிசம்பர் மாதம் மட்டும் நான்கு நாட்கள் பேசுவதற்கான தேதி குறிக்கப்பட்டுள்ளது. மீள் குடியமர்வு, புனர்வாழ்வு, வீட்டுவசதி, தொழில்வாய்ப்பு, அத்தியாவசியத் தேவைகள் ஆகிய கோரிக்கைகளை இவர்கள் முன்வைப்பதோடு, அரசியல் தீர்வையும் வலியுறுத்துகிறார்கள். ''நாங்கள் எங்களுக்குத் தேவையானதைச் சொல்லிவிட்டோம். அரசு இதுவரை எந்தப் பதிலும் சொல்லவில்லை!'' என்கிறார் சம்பந்தம்.
''இந்தப் பேச்சுவார்த்தையில் நாங்கள் நிதானமாகச் செயல்படுவோம். எமது மக்களுக்கு நாங்கள் துரோகம் செய்ய மாட்டோம். விட்டுக்கொடுக்க முடியாத விடயங்களை விட்டுத்தர மாட்டோம்!'' என்கிறார் சம்பந்தம். இன்னும் எத்தனை சுற்று பேசுவார்கள் எனப் பார்ப்போம்!
தமிழர்களின் மௌன எழுச்சி!
தமிழர்கள் முதலில் அடி வாங்கியதும், திருப்பி அடிக்க ஆரம்பித்ததும் யாழ்ப்பாணம்தான். எல்லாவற்றுக்கும் ஆரம்பம் அதுதான். இப்போது அங்கும் சில ஒளி மின்னல்கள் கடந்த வாரத்தில் தெரிந்தன. உலகம் முழுவதும் கொண்டாடப்படும் நவம்பர் 27 மாவீரர் நாளுக்கான நிகழ்வாக யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வளாகத்தில் ஒரு சுவரொட்டி ஒட்டப்பட்டதாம்.
'சத்திய லட்சிய வேள்வியில் தம்மை ஆகுதியாக்கிய மாவீரர்களின் சத்திய வழியில் பயணித்து, சுதந்திரத் தமிழீழத்தை வென்றெடுக்க உறுதி பூணுவோம்!’  என்று எழுதப்பட்டதைப் பார்த்து, தமிழ் மாணவர் கள் உணர்ச்சி அடைய... அடுத்த சில நிமிடங்களிலேயே ஆறு பைக்குகளில் முகமூடி அணிந்து (ராணுவத்தினர் என்று சொல்லப்படுகிறது!) வந்தவர்கள் அந்த சுவரொட்டியைக் கிழித்துச் சென்றுவிட்டார்களாம். கானா நகர் மணற்காடு முத்துமாரி அம்பாள் ஆலயத்துக்கும் பண்டத்தரிப்பான் குளம் ஸ்ரீசுந்தரேசன் பெருமாள் கோயிலுக்கும் வந்த கடற்படை வீரர்கள், 'இந்த ஒரு வாரத்துக்கு கோயிலில் மணி அடிக்கக் கூடாது!’ என்று உத்தரவிட்டார்களாம்.
மீறி ஒலித்திருக்கிறது 'மாவீரர்’ மணிஓசை!

ஜெயலலிதாவின் தைரியம் பிடிக்கும்! அழகிரி மகன் அதிரடி...


''உங்களுக்கு ஒண்ணு தெரியுமா... நான் முதல்வருக்கு ரொம்ப நெருக்கமானவன்... முன்னாள் முதல்வர், தலைவர் கலைஞரைச் சொல்லலை... இந்நாள் முதல்வரைத்தான் சொல்றேன்!''- சஸ்பென்ஸ் வைத்துச் சிரிக்கிறார் துரை தயாநிதி. சன் ஆஃப் அழகிரி!  
 ''ரொம்ப யோசிக்காதீங்க சார்... போயஸ் கார்டன்ல சி.எம். வீட்டுக்குப் பக்கத்துலதான் என் வீடும். அதைத் தான் சொன்னேன்!'' - செம  பில்ட்-அப் கொடுத்துச் சிரித்தவர், தயங்கித் தயங்கிக் கேட்ட கேள்விகளுக்குக்கூட மழுப்பாமல், நழுவாமல், தடதடஎனப் பதில் அளித்தார்.
''கல்யாண வாழ்க்கை எப்படிப் போயிட்டு இருக்கு? அனுஷா உங்க குடும்பத்தோட செட் ஆகிட்டாங்களா?''  
''கல்யாணத்துக்கு அப்புறம் லைஃப் இஸ் பியூட்டிஃபுல்! எனக்குத் தெரியாத சொந்தங்கள்கூட அனுஷாவுக்குத் தெரியிற அளவுக்கு அட்டாச்டு ஆகிட்டாங்க. 'துரையா இவ்வளவு அழகா குடும்பம் நடத்துறான்’னு குடும்பத்திலும் எல்லாருக்கும் ஆச்சர்யம்தான். எல்லாத்துக்கும் காரணம், அனுஷா. இதையே அவங்ககிட்ட கேட்டா, 'நான்தான் காரணம்’னு சொல்வாங்க. ரொம்ப நல்லா இருக்கோம்.
இப்பவும் நல்லா ஞாபகம் இருக்கு. சும்மா ஒரு ஃப்ரெண்ட் மூலமாத்தான் அனுஷா எனக்கு அறிமுகம். கொஞ்ச நாள் பழக்கத்துலயே அம்மா மாதிரி பிரியமா நடந்துக்கிட்டது பிடிச்சது. கல்யாணம் பண்ணிக்கிட்டா, என் குடும்பத்துக்கு நல்லா செட் ஆவாங்கனு தோணுச்சு. ஆனா, அதைப்பத்தி அவங்ககிட்ட எதுவுமே நான் சொல்லலை. ரெண்டு வருஷ ஃப்ரெண்ட்ஷிப்புக்குப் பிறகு, ஒரு நவம்பர் 23-ம் தேதி நான்தான் முதலில் காதலைச் சொன்னேன். ஒரு சின்ன இடைவேளைக்குப் பிறகு 'யெஸ்’ சொன்னாங்க. அது வாழ்க்கையில மறக்கவே முடியாத தருணம். அடுத்த நவம்பர் 18-ல் கல்யாணம். எனக்கு நவம்பர் ரொம்பவே ஸ்பெஷல்!
அனுஷாவோட பெஸ்ட் ஃப்ரெண்ட்ஸ் என் அம்மா - அப்பாதான். கட்சிக்காரங்க வருகை, பேச்சுவார்த்தைனு வீட்ல எப்பவும் ஒரு பரபரப்பான சூழல் இருந்துட்டே இருக்கும். அப்போ என் மூலம்தான் அம்மா எந்த விஷயத்தையும் அப்பாகிட்ட சொல்வாங்க. இப்போ அந்தப் பொறுப்பை அனுஷா எடுத்துக்கிட்டாங்க. 'இல்ல மாமா... நீங்க அப்படிப் பேசி இருக்கக் கூடாது’னு ஜஸ்ட் லைக் தட் அப்பாகிட்ட கரெக்ஷன்ஸ் சொல்றாங்க. ஆச்சர்யமா அப்பாவும், 'ஆமாம்ல... நீ சொல்றதுதாம்மா சரி’னு சொல்றார். 'என்னடா நடக்குது இங்கே’னு நான்தான் மலைச்சுப்போய் நிக்கிறேன்!''
''அரசியல், குடும்பம், சினிமா தயாரிப்புனு பரபரப்பான லைஃப் ஸ்டைல். ஆனா, மீடியாக்களிடம் இருந்து ஏன் விலகியே இருக்கீங்க?''
''ஒரு வரியில் பதில் சொல்லணும்னா... நான் எங்க அப்பா மாதிரி. அதனாலதான்! எதையும் பேசிட்டே இருக்கிறதைவிட செஞ்சு முடிச்சிரணும்னு நினைப்பேன். அதே மாதிரி பேசணும்னு நினைச்சா, யாருக்காகவும் எதுக்காகவும் பயப்பட மாட்டேன். மனசுல தோணுறதைப் பேசிட்டுப் போயிட்டே இருப்பேன். அது நம்ம மீடியா சர்க்கிளுக்கு செட் ஆகலை. அவ்வளவுதான்!''  
''உங்க அண்ணன் உதயநிதி ஸ்டாலின், தம்பி அருள்நிதி எல்லாம் நடிக்க ஆரம்பிச்சுட்டாங்க. நீங்க அவங்களைவெச்சு உங்க பேனர்ல படம் தயாரிப்பீங் களா?''
''நல்ல ஐடியா. ஆனா, ரெண்டு பேரும்தான் ஏற்கெனவே அவங்கவங்க பேனர்ல நடிச்சுட்டு இருக்காங்களே. இப்போதைக்கு உதயா அண்ணனின் ரெட் ஜெயன்ட்தான் தமிழ் சினிமாவின் நம்பர் ஒன் புரொடக்ஷன் கம்பெனி. நல்ல டீம், பக்கா பிளானிங்னு எல்லாத்துலயும் தெளிவா இருக்காங்க. 'மங்காத்தா’வைக்கூட சன்னுக்கு விற்றுக் கொடுத்ததில் அண்ணன் எனக்கு நிறைய உதவி பண்ணார். அவங்க ரெண்டு பேருக்கும் 'ஓ.கே’-ன்னா இப்பவே ரெண்டு பேரையும் வெச்சுப் படம் தயாரிக்க நான் ரெடி!''
''ஓ.கே. உண்மையைச் சொல்லுங்க... அ.தி.மு.க. அரசின் ஆறு மாத கால ஆட்சி எப்படி இருக்கு?''
''இதுல நான் சொல்ல என்ன இருக்கு? அதான் தமிழ்நாடே கொதிப்புல இருக்கே? சமச்சீர்க் கல்வியில் கை வைக்கத் தொடங்கி, இப்போ பால் விலை, பஸ் கட்டண உயர்வுனு வந்து நிக்குது. 'மாற்றம் வேணும்... மாற்றம் வேணும்’னு பக்கம் பக்கமா எழுதினாங்க. 'ஓ... மாற்றம் வேணும்போல இருக்கு’னு மக்களும் நம்பி ஓட்டுப் போட்டாங்க. ஆனா, இந்த அம்மாவோ சமச்சீர்க் கல்வி ரத்து, மக்கள் நலப் பணியாளர்கள் பணி நீக்கம், தலைமைச் செயலகம் - அண்ணா நூற்றாண்டு நூலகம்  இட மாற்றம், அமைச்சர்கள் - அதிகாரிகள் மாற்றம்னு பரபரப்பா இருக்காங்க. தி.மு.க. ஆட்சியில் சினிமாவுக்குக் கேளிக்கை வரியே கிடையாது. இப்ப நகரத்தில் 30 சதவிகிதம், மற்ற பகுதிகளில் 20 சதவிகி தம்னு வரி போட்டு வாட்டுறாங்க. இது தமிழ் சினிமாவுக்குப் பின்னடைவு இல்லையா? 'சினிமாவை ஆக்கிரமிச்சுட்டாங்க’னு அப்போ எங்களைப் பத்திப் புரளி கிளப்பினவங்க எல்லாம் இப்ப என்ன பண்றாங்கனு தெரியலை. இந்தக் கொடுமைகளை நடுநிலையான பத்திரிகை கள், மீடியாக்கள் எழுதத் தொடங்கி இருக்காங்க. அது மட்டும்தான் நல்ல விஷயம்!''
''ஜெயலலிதாவிடம் உங்களுக்குப் பிடிச்ச விஷயம்னு ஏதாவது இருக்கா?''
''இருக்கே... அந்தத் தைரியம் பிடிக்கும்! தைரியம் இல்லாம யாரும் அந்தப் பதவிக்கு வர முடியாது. ஆனாலும், இந்த அம்மா வுக்குத் தைரியம் கொஞ்சம் அதிகம். தன்னுடைய முடிவில் மற்றவர்கள் தலையீடு இல்லாமல் பார்த்துக்கிறதும் நல்ல விஷயம்தான். ஆனா, இந்தத் தகுதிகளை எல்லாம் மக்களுக்கு எதிரான நடவடிக்கைகளை எடுக்கத்தான் பயன்படுத்துறாங்கனு நினைக்கும்போதுதான் வருத்தமா இருக்கு!''
''அப்பாவுக்கும் சித்தப்பா ஸ்டாலினுக்கும் கட்சித் தலைமைப் பதவியைக் கைப்பற்றுவதில் பெரிய போட்டியே நடக்குதுனு சொல்றாங் களே..?''
''ரெண்டு பேரும் சேரக் கூடாதுனு நினைக்கிறவங்கதான் 'போட்டி இருக்கு... போட்டி இருக்கு’னு எழுதிட்டு இருக்காங்க. அதை ஏன் பதவிக்கான போட்டினு சொல்றீங்க? கட்சித் தலைமையிடம் நல்ல பேர் எடுக்க, கட்சியை வளர்க்க ஆரோக்கியமாப் போட்டி போடுறாங்கனு ஏன் நினைக்க மாட்டேங் கிறீங்க? இப்பவும் சித்தப்பா டெல்லி போனா... அப்பாவை வீட்ல சந்திப்பார். அப்பாவும் சென்னை வந்தா, சித்தப்பாவோட சேர்ந்துதான் தலைவரைச் சந்திப்பார். ரெண்டு பேருமே கட்சி தொடர்பான விஷயங்களை அடிக்கடி போன்ல பேசிப்பாங்க. பரபரப்புக்காக மீடியா ஏற்படுத்தும் பிம்பம்தான் ரெண்டு பேருக்கும் இடையிலான போட்டி!''  
''மதுரையைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பது, நாடாளுமன்றத்தில் பேச மறுப்பது, தென் தமிழ்நாட்டில் தன்னை ஆதரிக்காதவர்களைக் கட்சிக்குள் கட்டம்கட்டுவது என உங்கள் அப்பாவைப் பற்றிய செய்திகள் அனைத்தும் நெகட்டிவ் தொனியிலேயே இருப்பது ஏன்?''
''கட்சியில் தனக்கு எவ்வளவு நெருக் குதல் வந்தாலும் தன்னை நம்பி வரும் நல்லவர்களைக் கடைசிவரை கை விடாமல் துணையாக இருப்பது, மதுரை மக்களுடன் அந்நியோன்யமாக இருப்பது, யாரும் தப்பா நினைச்சுக்குவாங்களோனு நினைக்காம மனசுல பட்டதைப் பளிச்னு சொல்றதுனு எங்க அப்பா ஒரு ரியல் ஹீரோ சார். அவர் எம்.பி., அமைச்சர் ஆனதெல்லாம் கட்சியும் தொண்டர்களும் ஃபோர்ஸ் பண்ணி நடந்த விஷயங்கள். ஏகப்பட்ட நல்ல விஷயங்கள் பண்ணி இருக்கார். ஆனா, நெகட்டிவ் செய்திகளைவெச்சு சென்சேஷன் செய்யும் ஆங்கில மீடியாக்கள், எங்கள் குடும்பத்தைப் பத்தி புரளி கிளப்புறதுல அதீத ஆர்வம் காட்டுறாங்க... அவ்வளவுதான் என்னால சொல்ல முடியும்!''
''நீங்கள் கனிமொழி அத்தையின் செல்லமா?''
''ரொம்பவே செல்லம்! ரொம்ப மென்மையான இயல்புகொண்ட அவங்க இத்தனை நாள் ஜெயில்ல கஷ்டப்பட்டதை இப்போ நினைச்சா லும் மனசுக்குக் கஷ்டமா இருக்கு. ஜெயில்ல நான் போய் அவங்களைப் பார்த்தப்பகூட, 'அனுஷாவுக்குக் கால்ல அடிபட்டுருச்சாம்ல. உன்னை நம்பி வந்த பொண்ணு. பத்திரமாப் பார்த்துக்க’னு சொன்னாங்க. அப்பா மேலயும் என் மேலயும் கனி அத்தைக்கு எப்பவுமே தனிப் பிரியம். மதுரைக்கு வந்தா, எங்க வீட்லதான் தங்குவாங்க. அம்மாவுக்கும் அவங்க பயங்கர க்ளோஸ். அவங்களுக்கு  ஜாமீன் கிடைச்சது ரொம்பவே சந்தோஷம். அத்தையைச் சீக்கிரமே பார்க்கணும்!''  
''கலைஞர் தாத்தா என்ன சொல்றார்?''
''தாத்தாவைச் சந்தித்தால் முக்கால்வாசி நேரம் அரசியல்தான் பேசுவேன். சினிமாபத்தியும் நிறையப் பேசுவோம். 'என்னப்பா, அந்தப் படம் எப்படி இருக்கு, இந்தப் படம் எப்படிப் போகுது, உதயா படம் நல்ல கலெக்ஷன்னு கேள்விப்பட்டேன்’னு நிறையப் பேசு வார். அரைகுறைத் தகவல்களோட ஏதாவது தப்பா சொல்லிட்டா, 'இல்லையே... அந்தப் படம் சுமார்னு எழுதி இருக்காங்க’னு ஷார்ப்பா கண்டுபிடிச்சுடுவார். ஒரு நாளைக்கு 20 பேப்பர் படிச்சா எந்த விஷயம்தான் அவருக்குத் தெரியாம இருக்கும்?''
'' 'மதுரையை மீட்டெடுப்போம்’னு சொல்லி, தீவிரமான நடவடிக்கைகளில் இறங்கி இருக்கு ஜெயலலிதா அரசு. இதைப்பத்தி என்ன நினைக்கிறீங்க?''
''தேர்தலுக்கு முன்னாடி ஜெயலலிதா மதுரைக்கு பிரசாரத்துக்கு வந்தப்போ என்ன காரணமோ தெரியலை, கலெக்டர் அனுமதி தரலைனு நினைக்கிறேன். அந்தக் கோபத்தின் வெளிப்பாடுதான் இது. சம்பந்தமே இல்லாம கட்சிக்காரங்களை அரெஸ்ட் பண்ணிட்டு இருக்காங்க. மதுரையில் இப்ப தி.மு.க-க்காரர்கள்  பாதிப் பேர் ஜெயில்லதான் இருக்காங்க. அரசு கேபிள் டி.வி. வந்த பிறகு, ராயல் கேபிள் விஷன் ஒளிபரப்பை மதுரையில் நிறுத்திட்டோம். ஏன்னா, இருக்கும் மிச்சம் மீதி கட்சிக்காரங்களையும் அதைக் காரணம் காட்டி, அரெஸ்ட் பண்ணிடுவாங்களோனுதான்.
மதுரைக்காரங்க எது பண்ணாலும் பிரமாண்டமா பண்ணுவாங்க. அதனாலயே மதுரையில் சின்ன சம்பவமும் அதீதக் கவனம் ஈர்க்குது.  அதான் பிரச்னையே! 'அண்ணே... அதைப் பண்ணிட்டோம்ணே,  இதைப் பண்ணிட்டோம்ணே’னு பெருமையா சொல்லிச் சொல்லியே சாதாரண விஷயத்தைக்கூட பூதா காரம் ஆக்கிடுவாங்க. அப்பாகூட எப்பவும் 10 பேர் இருப்பாங்க. ஏதாவது ஒரு விஷயம் பேசினா, அது 100 விஷயமா வெளியே போகும். ஆனாலும் எனக்கு இந்த உலகத்திலயே பிடிச்ச இடம் மதுரைதான். ஒரு குடும்பம் மாதிரி அரவணைச்சுப் பாசம் காட்டுற கட்சிக்காரங்கதான் அதுக்குக் காரணம்!''