Friday, December 2, 2011

சட்டசபைக்குள் பிரபாகரன் படம் போட்ட சட்டையுடன் நுழைவேன்!


மாவீரர் நாள் கொண்டாட்டங்கள்

முள்ளிவாய்க்கால் படுகொலைகளுக்குப் பிறகும், உலகத் தமிழினமே மாவீரர் தினத்தை எழுச்சியோடு கொண்டாடி வருகிறது. இந்த ஆண்டு கனடா, லண்டன், அமெரிக்கா, ஆஸ்திரேலியா போன்ற அன்னிய தேசங்களில்கூட மாவீரர் தினத்தைக் கொண்டாட அனுமதித்தனர். ஆனால், தமிழகத்தில் அதற்குத் தடை விதித்து, தமிழ் உணர்வாளர்களின் நெஞ்சில் நெருப்பை அள்ளிக் கொட்டி இருக்கிறது அ.தி.மு.க. அரசு! 
கடலூர் மஞ்சக்குப்பம் மைதானத்தில் 'நாம் தமிழர்’ கட்சியின் தலைவர் சீமான் தலைமையில் பிரமாண்ட பொதுக் கூட்டம் நடத்தத் திட்டமிடப் பட்டு இருந்தது. தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்ததும், 'தடையை மீறி கூட்டத்தை நடத்திக் காட்டுவோம்’ என்று கட்சியினர் ஆவேசமாகவே, கடலூர் சூடானது.
ஆனால் சிக்கல் வரக் கூடாது என்று நினைத்தோ என்னவோ, கடலூர் சுப்புராயலு திருமண மண்ட பத்தில் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. தமிழ் ஈழப் போரில் உயிர் நீத்தவர்களுக்கு மெழுகுவத்தி ஏற்றி வீரவணக்கம் செலுத்திவிட்டுப் பேச ஆரம்பித் தார் சீமான். ''தமிழக அரசு எங்களை அடக்கி முடக்கிவிடலாம் என்று நினைக்கிறது. அது ஒருபோதும் நடக்காது. சர்வதேசத் தடைகளையே பார்த்தவன் நான். இந்தத் தடைகள் எல்லாம் நம்மை என்ன செய்யும்? நாங்கள் வீட்டைவிட்டு வெளியில் கிளம்பும்போது, வாய்க்கரிசியை வாயில் போட்டுக்கொண்டுதான் கிளம்புவோம். இந்தப் பூச்சாண்டிகளுக்கு எல்லாம் பயப்பட மாட்டோம்'' என்றதும் தொண்டர்கள் ஆர்ப்பரித்தனர். ''கண்டிப் பாக ஒரு நாள் நான் எம்.எல்.ஏ. ஆவேன். அப்போது சட்டசபைக்கு தலைவர் பிரபாகரன் படம் போட்ட சட்டையோடுதான் போவேன். அப்போது முடிந்தால், 'சட்டசபைக்கு சீமான் வரக் கூடாது’ என தமிழக அரசு தடை விதிக்கட்டும்'' என்று எதிர்காலக் கனவையும் சுட்டிக் காட்டினார்.
சேலம் மாவட்டம் கொளத்தூர் அருகே உள்ள புலியூரில், விடுதலைப் புலிகள் பயிற்சி பெற்ற இடமும், வீர மரணம் அடைந்த போராளி பொன்னம்மானின் நினைவிடமும் இருக்கிறது. இங்கு, பெரியார் திராவிடர் கழகம் நடத்தும் மாவீரர் தினத்தில் தமிழ் உணர்வாளர்களைத் தாண்டி, பொதுமக்களும் குடும்பம் குடும்பமாக வந்து பொன்னம்மான் நினைவிடத்தில் மலர் தூவி, மெழுகுவத்தி ஏற்றி அஞ்சலி செலுத்துவது வழக்கம். இவ்வருட நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக வந்திருந்த பாடலாசிரியர் அறிவுமதியின் பேச்சில் செம காரம்!  
''உலக சூழ்ச்சிகளால் நாம் சுழியமாக மாற்றப் பட்டாலும், இந்தச் சுழியங்களுக்கு முன்னால், எம் தலைவர் மறுபடி யும் ஒன்றென வந்து நிற்பான். அப்போது சுழியங்கள் பத்தாகி, நூறாகி, லட்சமாகி, கோடியாகி ஒரு மகா சமுத்திரத்தின் வெற்றி விடுதலையை எம் தமிழினம் பெறும்.  நான் சங்க இலக்கியம் படித்திருக்கிறேன். புற நானூற்று வீரம் என்பது தமிழ் மன்னர்கள் தமிழ் மன்னரை அடித்த வரலாறுதானே தவிர, இன்னோர் இன எதிரியை ஒழித்த வரலாறு இல்லை. ஆனால், தமிழ் இன வரலாற்றில் முதன் முதலாக... எவன் என் இனத்தின் எதிரி என்று அடையாளம் கண்டு, அதற்குரிய படை கண்டு, அதற்குரிய உலகத்தின் அறங்களை ஏற்றுக்கொண்டுப் போராடிய தமிழினத் தலைவர் என்றால், அது எம் தலைவர் பிரபாகரன்தான். 'அவன் மிகச்சிறந்த வீரன். அவன் தரைப் படை கண்டான்; கடற்படை கண்டான்; வான்படை கண்டான்; கரும்புலி கண்டான்’ என்பது மட்டும்தான் பெரும்பகுதி மனிதர்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டு இருக்கிறது. அவர் கற்றுக்கொடுத்த பண்பாடுகள் மிகவும் உயர்வானவை. அந்த இயக்கத்தைப் போல பண்பாட்டு இயக்கம் வேறு எதுவும் இல்லை. அந்தப் பண்பாட்டுத் தலைவரை உலகத்தின் வேறு எந்தத் தலைவரோடும் ஒப்பீடு செய்ய முடியாது.
அதற்கு ஓர் உதாரணம் சொல்கிறேன்... கீழே கிடந்த சிங்களக் கொடியை எரித்திருக்கிறார் ஒரு புலிப் போராளி. அதைக் கேள்விப்பட்டு, 'புலிக் கொடி என்பது நம் இயக்கத்திற்கும் நம் தேசியத்திற்கும் எவ்வளவு உன்னதமானதோ... அதே போல, சிங்கள மக்களுக்கும், ராணுவத்துக்கும், அந்த நாட்டுக்கும் மதிக்கத்தக்க புனிதமான கொடி அது. அவர்களுக்கும் நமக்கும் உரிமைப் பங்கிடுவதில்தான் போராட்டமே தவிர... மனிதப் பண்பாட்டில் அவர்கள் எந்த இடத்திலும் நம்மைக் கேலி பேசத் துளியும் இடம் கொடுத்துவிடக் கூடாது. அந்தச் சிங்களக் கொடியைப் பார்த்ததும், அதை மதித்து உயரமான இடத்தில் வைத்திருக்க வேண்டும்’ என்று பாடம் நடத்தினார். இப்படி ஒரு பண்பாட்டை வளர்த்தவனா தீவிரவாதி?'' என்று கேள்வி எழுப்பினார்.
தமிழகத்தில் மாவீரர் நாள் கொண்டாட்டம் அடக்கியே வாசிக்கப்பட்டாலும், அண்டை மாநிலமான கர்நாடகத்தில் ஊர் தோறும் போஸ்டர்கள், மஞ்சள் சிவப்பு புலிக் கொடிகள், மாவீரர் தினக் கூட்டங்கள், தேவாலயங்களில் திருப்பலி, கோவில்களில் பூஜை, பள்ளி கல்லூரிகளில் இனிப்பு வழங்கி அசத்தி விட்டார்கள். அதோடு, '57-ம் அகவையில் அடியெடுத்துவைக்கும் தேசியத் தலைவர் பிரபாகரன் பல்லாண்டு வாழ்க’ என்று பிரமாண்ட ஃப்ளெக்ஸ் பேனர்கள் ஆங்காங்கே முளைத்து இருந்தன.  

No comments:

Post a Comment