Sunday, November 27, 2011

புனிதவதிக்கு மீண்டும் சித்ரவதை!


புனிதவதிக்கு மீண்டும் சித்ரவதை!

சென்சாரில் கதறிய படம்
'காற்றுக்கென்ன வேலி’ படத்தின் மூலம் ஈழத்துப் பிரச்னையை சினிமாவாக எடுத்து அதிர்வலை களை ஏற்படுத்தியவர், புகழேந்தி தங்கராஜ். இப்போது அவர் எடுத்திருக்கும் 'உச்சி தனை முகர்ந்தால்’ படத்துக்கு சென்சாரில் ஏகப் பட்ட கத்திரி. அவரை சந்தித்தோம்! 
''உலகத்தில் எந்தக் குழந்தைக்கும் நடக்கக் கூடாதது பதிமூணு வயசு புனிதவதிக்கு இலங்கை யில் நிகழ்ந்தது. ஏன் அந்த சிறுமிக்கு அப்படி ஒரு அநியாயம் நிகழ்ந்தது என்ற கேள்வியை படத்தில் அழுத்தமாக எழுப்பி இருந்தோம். ஆனால், அனுமதி வாங்குறதே பெரிய போராட்டமாகஇருந்தது.
காசி ஆனந்தனோட, 'ஆயிரம் மலைகளைத் தோளாக்கு... அடிமைக்கு விடுதலை நாளாக்கு’ என்று வரும் பாட்டின் இரண்டாவது வரியை எடுத்துவிட்டார்கள். அதுபோல் கதிர்மொழி எழுதிய பாடலில் இருந்த 'வரிப் புலி இனத்தை நரி நகம் கீறுமோ’ என்ற வரியையும் நீக்கிட்டாங்க.
'தமிழ்ச்செல்வன் அண்ணா வீர மரணம் அடைஞ்ச நேரம்’னு புனிதவதியோட அம்மா ஒரு வசனம் பேசுவாங்க. அதில் தமிழ்ச்செல்வன் பேரை எடுக்கச் சொன்னாங்க. அப்படி எடுத்தா, 'அண்ணா மரணம்னு வந்திடும். அது பெரிய கருத்துப் பிழை’ன்னு சொன்னதும் 'செல்வன் அண்ணா’னு போடச் சொன்னாங்க.   நடேசன் கேரக்டர்ல சத்யராஜ் பேசும்போது, 'ஒரு லட்சம் தமிழர்களை ஓட ஓட விரட்டிக் கொன்னது நட்பு நாடா? ஆயிரக்கணக்கான தமிழ்ப் பெண்களை கற்பழிச்சுக் கொன்ன நாடு நட்பு நாடா?’னு வசனம் பேசுவார். இதில், 'நட்பு நாடா?’ வார்த்தை சென் சார்ல கட் ஆகிடுச்சு.
சேனல் 4 வீடியோ காட்சிகளைப் பயன்படுத்தி இருந்தோம். அதைக் குறைக்கச் சொல்லிட்டாங்க. கூண்டுக்குள்ள கிளி இருக்கிற காட்சியையும் கட் பண்ணச் சொல்லிட்டாங்க. ஒன்றரை லட்சம் தமிழர்கள் கூண்டுக்குள் இருப்பதைப்பற்றி யாரும் கவலைப்படலை; கிளி கூண்டுக்குள் இருக்கிறதைப் பார்த்துக் கவலைப்படுறாங்க. இந்தப் படம் மூலம் கிடைக்கும் ஆதரவு, கேள்விகள் எல்லாமே பாதிக்கப்பட்ட, சீரழிக்கப்பட்ட, சிதைக்கப்பட்ட, சிறுமிகளுக்குக் கிடைக்கும் நியாயமா இருக்கும்'' என்றார்.
தமிழனுக்குத்தான் எத்தனை தடைகள்!

No comments:

Post a Comment