Sunday, August 8, 2010

‘டப்பிங் பேச மறுக்கிறார்’ நடிகர் ஆர்யா மீது தயாரிப்பாளர் சங்கத்தில் புகார்

 
 
‘சிக்குபுக்கு’ படத்தில் டப்பிங் பேச மறுப்பதாக ஆர்யா மீது தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.
‘மீடியா ஒன் குளோபல் என்டர்டெயின்மென்ட்’ என்ற நிறுவனம் தயாரிக்கும் படம் ‘சிக்குபுக்கு’. இதில் ஆர்யா, ஸ்ரேயா நடிக்கிறார்கள். மணிகண்டன் இயக்குகிறார். படப்பிடிப்பு முடிந்து பின்னணி இசை சேர்ப்பு பணி நடந்து வருகிறது. இந்த நிலையில் தயாரிப்பு நிறுவனம் ஆர்யா மீது தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் கொடுத்துள்ளது. அதில், ஆர்யா ‘சிக்குபுக்கு’ படத்தின் மீது ஆர்வம் இல்லாமல் இருக்கிறார். முறையாக டப்பிங் பேச வர மறுக்கிறார். இரண்டு முறை அவருக்காக ரெக்கார்டிங் தியேட்டர் பதிவு செய்து வைத்திருந்தும் டப்பிங் பேச வரவில்லை. ‘மதராச பட்டினம்’ முடிந்தவுடன் சிக்குபுக்கு புரமோஷன் நிகழ்ச்சிகளில் பங்கேற்பேன் என்று சொன்னவர் அதற்கான ஒத்துழைப்பைத் தரவில்லை என்று கூறப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஆர்யாவிடம் கேட்டபோது, “தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் கொடுத்திருப்பது எனக்குத் தெரியாது. நான் நடிக்கும் எல்லா படங்களும் எனக்கு ஒன்றுதான். எல்லா படத்துக்கும் முழு ஒத்துழைப்பு கொடுத்து வருகிறேன். சிக்குபுக்கு படத்துக்கும் அப்படித்தான் ஒத்துழைப்பு கொடுக்கிறேன்” என்றார்.

No comments:

Post a Comment