Tuesday, August 31, 2010

இரண்டாவது ஆண்டாக இணைந்த 80களின் நட்சத்திரங்கள்!

கடந்த ஆண்டைப் போலவே, 80களில் முன்னணி நட்சத்திரங்களாக வெள்ளித்திரையில் வலம் வந்த நடிகர் - நடிகைகள் மீண்டும் ஒன்றிணைந்து தங்கள் நினைவுகளைப் பகிர்ந்து கொண்டனர்.
இம்முறையும் இந்த "எவர்க்ரீன் 80's" விருந்தை நடிகை சுகாசினி மணிரத்னம், லிசா பிரியதர்ஷன் ஆகியோர் ஏற்பாடு செய்தனர்.
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள இயக்குனர் பிரியதர்ஷன்-லிசி தம்பதிகளின் வீட்டில் நிகழ்ந்த இந்த சந்திப்பில், வழக்கமான உற்சாகத்துடன் நடிகர் ரஜினிகாந்த் கலந்துகொண்டார்.
சிரஞ்சீவி, மோகன்லால், வெங்கடேஷ், சரத் குமார் மற்றும் அர்ஜூன் ஆகியோர் இம்முறை புதிதாக இணைந்தவர்கள். இதில், சரத் குமார் சிறப்பு விருந்தினர்.
நடிகர்கள் ரஜினிகாந்த், பிரபு, கார்த்திக், சுரேஷ், மோகன், அர்ஜூன், பிரதாப்போத்தன், பானுசந்தர், மம்முட்டி, மோகன்லால், சிரஞ்சீவி, வெங்கடேஷ், அம்ரீஷ், நடிகைகள் லிசி, ராதிகா, சுஹாசினி, ரேவதி, ராதா, அம்பிகா, பூர்ணிமா, நதியா, ஷோபனா, குஷ்பு, ரம்யாகிருஷ்ணன், சுமலதா ஆகியோர் கலந்துகொண்டார்கள்.
இந்தச் சந்திப்பின் போது, ஒருவரையொருவர் கட்டித் தழுவி தங்களது மகிழ்ச்சியையும் நினைவையும் பகிர்ந்துகொண்டனர்.
இரவு 9.30 மணிக்கு தொடங்கிய இந்த விருந்து ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் என விடிய விடிய மகிழ்வுடன் அரங்கேறியது.
தமிழகம், கேரளா, ஆந்திரா, கர்நாடகா என தென் தமிழகத்தின் திரை நட்சத்திரங்கள் ஒன்றிணைந்து நட்பு பாராட்டிக் கொண்டது குறிப்பிடத்தக்க அம்சம் என்றனர், இந்நிகழ்வில் கலந்துகொண்ட நடிகர், நடிகைகள்!

No comments:

Post a Comment