Wednesday, August 25, 2010

போதையா, பேதையா? 'கோகைன்' புயலில் த்ரிஷா

தெலுங்கானா பிரச்னை, ஜகன் மோகன் ரெட்டி யாத்திரை என ஆந்திர அனல்
அரசியலின் புதிய வடிவம், போதைப் பொருள்!
நைஜீரிய வாலிபர்கள் சிலர் ஆந்திராவின் அரசியல், சினிமா பிரபலங்களுக்கு 'கோகைன்' என்ற போதைப் பொருளை சப்ளை செய்ததாக எழுந்துள்ள பரபரப்புதான் தெலுங்கு தேசத்தின் தற்போதைய தலைப்புச் செய்தி. இந்தப் பட்டியலில் த்ரிஷாவின் பெயரும் இருப்பதாகக் கிளம்பிய தகவல், கோலிவுட் எங்கும் அனல் பேச்சுகளைக் கிளப்பி இருக்கிறது.
ஸ்டீஃபன் ரவீந்திரா என்ற ஆந்திர போலீஸ் டெபுடி கமிஷனர், வி.ஐ.பி-க்களின் ஏரியாவான பஞ்சாரா ஹில்ஸ் பகுதியில் சோதனை நடத்தி இருக்கிறார். ஒரு நைஜீரியப் பார்ட்டி, கோகைன் போதைப் பொருளு டன் நூலிழையில் தப்பிவிட, தொடங்கியது அதிரடிச் சோதனை. கடந்த 18-ம் தேதி இரவு போலீஸ் விரித்த வலையில் விக்டர் என்ற நைஜீரிய வாலிபர் சிக்கினார். அவரிடம் இருந்து 45 கிராம் கோகைன் பறிமுதல் செய்யப்பட்டது. இவரிடம் இருந்து கோகைனை வாங்கிய தாக ரகுபாபு, பரத்ராஜ் என்ற இருவரையும் வளைத்தது போலீஸ். இருவரும் பிரபல தெலுங்கு நடிகர் ரவிதேஜாவின் தம்பிகள் என்றதும், விவகாரம் பற்றிக்கொண்டது.
இருவரிடம் இருந்தும் 8 கிராம் கோகைன் கைப்பற்றப்பட்ட உடனேயே 'திரைத் துறைக்கும் போதைக் கும்பலுக்கும் தொடர்பு' என்ற ஸ்க்ரோலிங் செய்திகள் ஓடத் தொடங்கின. ரகுபாபு ஒரு படத்தில் ஹீரோவாகவும், சில படங்களில் கேரக்டர் ஆர்ட்டிஸ்ட்டாகவும் நடித்தவர். பரத்வாஜ், 'பெத்தபாபு' என்ற படத்தில் வில்லனாக நடித்திருக்கிறார்.
சிக்கிய விக்டரை போலீஸ் நொங்கெடுக்க, வரிசையாக வந்து சிக்கின அடுத்தடுத்த அதிர்ச்சிகள். அவரது செல்போன் ஆராயப்பட, அதில் சினிமா, அரசியல், வர்த்தகத் துறை பிரபலங்கள் பலரின் பெயர்கள் இருந்திருக்கின்றன. அதில் 10 நம்பர்களுக்கு விக்டர் அடிக்கடி பேசியிருப்பது தெரிய வந்தது. அதில் ஆறு பேர் நடிகை கள் என்று போலீஸ் சொன்னதாகச் சொல்கிறது ஆந்திர மீடியா. இதற்கிடையில், காம்னா ஜெத்மலானி, சார்மி, பூனம் கவுர், மது ஷாலினி ஆகிய நடிகைகளையும் இதில் இழுத்த தோடு நிற்காமல், நடிகை த்ரிஷாவுக்கும் தொடர்பு இருக்கிறது என்று வதந்தி நியூஸ் வாசித்தது தெலுங்கு மீடியா.
பார்கள் மற்றும் பப்களில்தான் பிரபலங்களுக்கு கோகைன் பந்திவைக்கப்பட்டதாக விக்டர் விவரித்து இருக்கிறான். பஞ்சாரா ஹில்ஸில் இருக்கும் பார்கள் சினிமா வி.ஐ.பி-க்களுக்கு ஃபேவரைட் ஸ்பாட். இங்குதான் விக்டருக்கு சினிமா பிரபலங்களுடன் நட்பு ஏற்பட்டிருக்க வேண்டும் என்று சந் தேகிக்கிறது போலீஸ். இதற்கிடையில், அசாருதீனின் மகன் உட்பட பலரும் செய்திகளில் அடிபட்டு இருந்தாலும், த்ரிஷாவும் எம்.பி. ஒருவரின் மகனும் தாமாகவே முன்வந்து இந்தச் செய்திகளை மறுத்து உள்ளனர்.
"போதைப் பொருள் கும்பலின் வாடிக்கையாளர்களைவிட, அந்த நைஜீரியக் கும்பலைக் கூண்டோடு பிடிக்க வேண்டும் என்பதே எங்களின் முதல் சவால். இதற்காக, ஹைதராபாத்தில் உள்ள கல்லூரிகளில் படிக்கும் உகாண்டா, நைஜீரியா போன்ற ஆப்பிரிக்க மாணவர்களின் பட்டியலைக் கேட்டிருக்கிறோம். அவர்களைக் கண்காணித்து வருகிறோம். ஏதாவது துப்பு கிடைக்கலாம் என்பதற்காகவே விக்டரின் செல்போனை ஆய்வு செய்தோம். அதில் பிரபலங்களின் பெயர்கள் இருந்தது உண்மை. அவர்களுக்கு உள்ள தொடர்புபற்றி தெளிவாக விசாரித்த பிறகே கூற முடியும்" என்கிறது போலீஸ்.
இந்த விவகாரம் கேள்விப்பட்டு கொதித்துப்போய் உள்ள த்ரிஷா, செல்போனில் தொடர்புகொள்ளும் தெலுங்கு மீடியாக்களிடம் கோபமாகக் கொந்தளிக்கிறார். கொடைக்கானலில் இருந்த த்ரிஷாவிடம் நாமும் பேசினோம்.
"இந்த விவகாரத்தில் எதற்காக என்னை இழுக்கிறார்கள் என்றே தெரியவில்லை. பிடிபட்டவரின் செல்போனில் என் போன் நம்பர் இருந்ததாகவும், அதனால், த்ரிஷாவை போலீஸ் விசாரிக்கப்போவதாகவும் முதலில் ஒரு தொலைக்காட்சிதான் செய்தி வெளியிட்டது. அந்த நிறுவனம் மீது வழக்கு தொடர உள்ளேன். ஹைதராபாத் நகர போலீஸ் கமிஷனருடன் உடனடியாக போனில் பேசி னேன். கிசுகிசு படித்துச் சிரித்துவிட்டுப் போவ தைப்போல் இந்த விவகாரத்தை விட முடியாது. இது என் கேரக்டரோடு தொடர்பு உடையது. நான் கோபத்தின் உச்சத்தில் இருக்கிறேன். நடிகை என்றால் என்ன வேண்டுமானாலும் எழுதலாம், பேசலாமா? இந்த விஷயத்தை நான் சும்மா விடுவ தாக இல்லை. அதேபோல் தெலுங்கு சினிமாவில் இருந்தும் நான் ஓடிவிட மாட்டேன். ஆந்திர திரை உலகம் எனக்கு மிகச் சிறந்த வாய்ப்பு களையும் வெற்றிகளையும் கொடுத்திருக் கிறது. தொடர்ந்து, தெலுங்குப் படங் களில் நடிப்பேன்" என்று கோபம் தணி யாதவராகப் பேசுகிறார் த்ரிஷா.
ஆந்திர அரசியல் மட்டும் அல்ல... சினிமாவும் ஸோ ஹாட்!

No comments:

Post a Comment