"'வெப்பம்', 'அழகர்சாமியின்குதிரை'ன்னு கவிதைத் தலைப்புகளோடு தயாரிப்பாளர் அவதாரம். நல்ல சினிமாவுக்கான உங்கள் பங்களிப்பை எதிர்பார்க்கலாமா?"
"நான் சினிமாவுக்கு வரும்போது இதன் பிசினஸ், இதற்குள் புழங்குகிற பணம், இதற்கான ஃபைனான்ஸ் எதுவும் தெரியாது. இப்ப நான் சினிமாவுக்கு வந்து 10 வருஷங்கள் ஆச்சு. வேலை பார்த்த சில தயாரிப்பாளர்களுடன் நல்ல அனுபவங் கள் அமையலை. 'இதைச் செய்தால் இவ்வளவு வரணும்'னு கணக்கில் இருந்தாங்க. சிலர் கதைகூடக் கேட்க மாட்டாங்க. என்னோட தப்பும் கொஞ்சம் இருந்திருக்கலாம். அந்த மாதிரி இனிமேல் படம் பண்ணக் கூடாதுன்னு நினைச்சேன்.
"எப்படி இருக்கும் 'நடுநிசி நாய்கள்'?" 
" 'விண்ணைத்தாண்டி வருவாயா' மறுபடியும் இந்தியில் பண்றீங்க? சுவாரஸ்யமான படமாக இருந்தாலும் போர் அடிக்காதா?"
"பிடிக்காத விஷயம்தான். ஆனால், உண்மையைச்  சொல்லணும்னா, நான் இந்தியில் ஒரு நல்ல பிரேக் தேடிட்டு இருக்கேன். அபிஷேக்  பச்சனை வெச்சு 'காக்க காக்க' பண்ணலாம்னா... சரியா அமையலை. என் பார்ட்னர்  எல்ரெட் குமார் எனக்கே தெரி யாமல் மும்பையில் 'விண்ணைத் தாண்டி வருவாயா'  ஸ்க்ரீன் பண்ணி இருக்கார். 'இது நிச்சயம் இந்தியில் செய்ய வேண்டிய படம்'னு  அனுராக் காஷ்யப், ரமேஷ் சிப்பி எல்லோரும் சொன்னாங்களாம். பெரிய வெளியீடு.  நிறைய ஆடியன்ஸ். ரஹ்மான் இதே ஐந்து பாடல்கள் தவிர, இன்னும் இரண்டு பாட்டு  போட்டுத் தர்றேன்னு சொல்லி இருக்கார். அதனால், இந்தியில் இறங்கிப்  பண்ணலாம்னு இருக்கேன். நிச்சயம் இந்த முயற்சி சுவாரஸ்யமா இருக்கும்னு  தோணுது!" சூர்யான்னா... எனக்கு ஒரு சக்சஸ் பேக்கேஜ். அஜீத், விஜய், விக்ரமிடம் எல்லாம், 'காக்க காக்க' கதை சொல்லி, 'நல்லா இல்லை', 'போலீஸ் வேண்டாம்', 'செகண்ட் பார்ட் சரியா இல்லை'ன்னு இப் படிப் பலப்பல காரணங்கள் சொல்லி நிராகரிச்ச படம். ஜோ சிபாரிசு பண்ணி எனக்காக நடித்தார் சூர்யா. எனக்கு அது பெரிய ஆடியன்ஸ் தந்தது. 'காக்க காக்க' பார்த்துட்டுதான் கமல் படம் பண்ண வாய்ப்பு கொடுத்தார்.
"திரும்பத்  திரும்பப் பேசியும் படம் பண்ண முடியாமப் பிரிஞ்சிட்டீங்க. உங்களுக்கும்  அஜீத்துக்கும் இடையில் என்னதான் நடக்குது. அஜீத்கிட்ட குழப்பமா...  உங்களிடமா?"
"10 வருஷங்களா அஜீத்துடன் பேசிட்டு இருக்கேன்.  ஒவ்வொரு தடவை சந்திக்கும்போதும், 'நம்மைச் சேரவிடாமல் பண்றாங்க...  பிரிச்சுடு றாங்க'ன்னு சொல்வார். இந்தத் தடவை மிஸ் பண்ணவே கூடாதுன்னு  சொன்னார். ஜூலையில் பண்ணலாம்னு சொன்னார். ரெடியா இருந்தேன். அப்புறம்  டிசம்பர்னு சொன்னார். திடீர்னு போன் பண்ணி, 'வெங்கட்பிரபுவை எனக்குப்  பிடிக்கும். அவர் ஐந்து ஹீரோ சப்ஜெக்ட் சொன்னார். அதில் ஒருத்தரா  நடிக்கிறேன்'னு சொன்னார். இவ்வளவு பெரிய ஹீரோ ஐந்து ஹீரோவில் ஒருத்தரா ஏன்  நடிக்கணும்னு ஆச்சர் யம். ஆனாலும், சரின்னு சொன்னேன். அப்புறம் ஜெமினி  மனோகர் பிரசாத்கிட்ட படம் பண்ணலாம்னு கேட்டு இருக்கார். அவங்க என்னைச்  சொல்ல, அஜீத் வேண்டாம்னு சொன்னாராம். அப்புறம் இயக்குநர்கள் விஷ்ணுவர்தன்,  'மதராசபட்டின்ம்' விஜய் ரெண்டு பேரிட மும் 'எனக்கு ஒரு படம் பண்ணிக்  கொடுங்க'ன்னு கேட்டு இருக்கார். இதெல்லாம் நடக்கும்போது, இதற்கிடையில் நான்  யாருன்னு யோசிச் சேன். இதை எல்லாம் அவர் என்னிடம் சொல்லி இருக்கலாம்.  ஏனோ... சொல்லலை. ஆனால், 'கௌதம்கிட்ட போனில் சொல்லிட்டேன்'னு சொல்லி  இருக்கார். அது உண்மை இல்லை. இனிமேல் அஜீத்திடம் போய் நிற்கணும்கிற தேவை  எனக்கு இல்லை!""என்ன இது... திரும்பத் திரும்ப த்ரிஷா, சமீரா ரெட்டின்னு... அவ்வளவு நட்பா.. இல்லை நடிப்பு பிடிச்சதா?"
"நம்ம இண்டஸ்ட்ரியில் இரண்டு படங்கள் சேர்ந்து  பண்ணினால், இரண்டு பேருக்கும் ஏதோ விஷயம்னு நினைப்பாங்க. அதுக்காக நான்  இந்த இண்டஸ்ட்ரிக்கு வரலை. த்ரிஷாவிடம் ராத்திரி 11 மணிக்கு போன் பண்ணி  'நாளைக்கு காலையில் 9 மணிக்கு வாங்க. ஒரு கதை சொல்றேன்'னு கேட்கலாம்.  வருவார். தமன்னா, அனுஷ்காகிட்ட அது மாதிரி என்னால் பேச முடியாது. சமீராவிடம் நான் டேட்ஸ் கேட்டதும் உடனே வந்தாங்க. எனக்கு வாழ்க்கை உருவாக்கிக் கொடுத்தவர் ஜோதிகா.அவங்களுக்குப் பிறகு எனக்கு ஃப்ரெண்ட்ஸ் மாதிரி இருக்கிறவங்களை வெச்சு நான் படங்கள் பண்றேன். அவ்வளவுதான்!"
"உங்கள் குடும்பத்தைப்பத்திப் பேசவே இல்லையே?"
"என் மனைவி ப்ரீத்திக்கு அதெல்லாம் பிடிக்காது.  எனக்கு ப்ரீத்தி நல்ல ஃப்ரெண்ட். எட்டு வயதில் இருந்து பழக்கம். ஒருநாள்  திடீர்னு என்னைப் பிடிச்சிருக்குன்னு சொன்னாங்க. எனக்குப் பயங்கர ஷாக்.  ரெண்டு பேருக்கும் ஒரே வயசு. எங்க காதல் கல்யாணம் ஒரு டிசம்பர் 26-ல்  நடந்தது. " 'ராவணன்' படம் பார்த்தீங்களா?"
"மூணு தடவை பார்த்தேன். தமிழ், இந்தி, தமிழ். இதுதான் வரிசை. எனக்கு ரொம்பப் பிடிச்சது. அதனோட உழைப்பு, அழகு எல்லாமே நல்ல விஷயம். இந்தி 'ராவணன்' பார்த்த பிறகுதான் விக்ரம் எவ்வளவு அருமையான நடிகர்னு புரிஞ்சது. எனக்குச் சில விஷயங்கள் கண்மூடித்தனமாகப் பிடிக்கும். அதில் மணிரத்னமும் ஒண்ணு. அவரை விமர்சனம் செய்ய எனக்கு யோக்கியதை இல்லை!"

No comments:
Post a Comment