* பேரரசுவின் 'பழனி' படத்தை அடுத்து, தெலுங்கு பக்கம் சென்றுவிட்ட காஜல் அகர்வால் தமிழில் இரண்டாவது இன்னிங்ஸை துவக்கியிருக்கிறார்.
* 'பையா'வின் கார்த்தி, யுவன்சங்கர் ராஜா, ஒளிப்பதிவாளர் மதி கூட்டணி இப்படத்திலும் தொடர்கிறது.
* கண்டிப்பான அப்பாவுக்கும் ஜாலியான மகனுக்கும் இடையே நடக்கும் கதையும், அதனுடன் சென்னையில் நடக்கும் க்ரைம் சம்பவங்களும் இணைத்து ஒரு க்ரைம் த்ரில்லராக வெளிவருகிறது. 'நான் மகான் அல்ல'. இதில், கார்த்தியின் பெயர் ஜீவா.

* 'பையா'வை அடுத்து கார்த்தியின் இப்படத்தையும் வாங்கி வெளியிடுகிறார், தயாநிதி அழகிரி.
* இத்திரைப்படத்தின் முதல் பாதி கதையை கேட்டுவிட்டு, தன்னால் இந்த அளவுக்கு காமெடி கலந்த கதாப்பாத்தில் நடிக்க முடியுமா என்று தயங்கியதாகவும், இயக்குனர் தான் தன்னால் இத்திரைப்படத்தை செய்ய முடியும் என்று நம்பிக்கை ஊட்டியதாகவும் கூறுகிறார் கார்த்தி.
* நான் மகான் அல்ல ஒரு காமெடி கலந்த த்ரில்லர் கதை என்றாலும், இத்திரைப்படத்தின் கடைசியில் மட்டும் தான் சண்டைக் காட்சி உண்டாம். ஆனால், படம் பார்ப்பவர்களுக்கு சலிப்பு ஏற்படாத வகையில் திரைக்கதை அமைத்திருப்பதாகச் சொல்கிறார், இயக்குனர் சுசீந்திரன்.
* இத்திரைப்படத்தில் வரும் 'இறகை போலே' என்ற பாடல் தான், தாம் பாடிய பாடல்களில் மிகவும் பிடித்த பாடல் என்று தெரிவித்துள்ளார் இப்படத்தின் இசை அமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா.

No comments:
Post a Comment